மார்ச்சில் மொத்தவிலை பணவீக்கம் 1 சதவீதமாக குறைந்ததுமார்ச்சில் மொத்தவிலை பணவீக்கம் 1 சதவீதமாக குறைந்தது ... ஜி.எஸ்.டி., ‘ரீபண்டு’ பெறுவதில் வணிகர்களுக்கு சிக்கல் ஜி.எஸ்.டி., ‘ரீபண்டு’ பெறுவதில் வணிகர்களுக்கு சிக்கல் ...
மூன்றில் ஒரு பங்கு நிறுவனங்கள் மூடப்பட்டால் ஆச்சரியமில்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2020
23:20

புதுடில்லி:தடை நீட்டிக்கப்பட்டிருப்பதை அடுத்து, உணவு சேவைகள் நிறுவனங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் என்றும் மூன்றில் ஒரு பங்கு நிறுவனங்கள் மூடப்பட்டால் ஆச்சரியமில்லை என்றும், இத்துறையை சேர்ந்த, யெலியோர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாதிப்பு

தடை நீட்டிப்பின் காரணமாக, உணவு சேவைகள் துறையை சேர்ந்த நிறுவனங்களின் வருவாய், 70 சதவீதம் அளவுக்கு சரிவைக் காணும் என்றும் இந்நிறுவனம் கணித்துள்ளது.இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சஞ்சய் குமார் கூறியுள்ளதாவது: இந்திய உணவு சேவைகள் துறை, 53 ஆயிரத்து, 200 கோடி ரூபாய் மதிப்பு கொண்டதாகும்.

விருந்தோம்பல் துறை, விமான போக்குவரத்து துறை ஆகியவற்றைப் போலவே, உணவு சேவைகள், துறையும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிஇருக்கிறது.இந்த துறையானது, 60 – 70 சதவீதம் அளவுக்கு, வருவாய் இழப்பை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது எங்கள் நிறுவனத்தில், 5,200 தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி உள்ளோம்.இவர்களில், 25 அல்லது 30 சதவீதத்தினர் தான் வேலையை தொடர வாய்ப்பிருப்பதாக கருதுகிறேன்.

நீண்ட கால பின்னடைவு

மேலை நாடுகளில், நிறுவனங்கள், ஊழியர்களுக்கு தர வேண்டிய ஊதிய சுமையில், ஒரு குறிப்பிட்ட பகுதியை, அரசாங்கமும் பகிர்ந்துகொள்கிறது. ஆனால் இங்கே அப்படி பார்க்க முடியவில்லை. தற்போதைய நிலையில், சம்பளத்தை வழங்க முடியாத நிலையில் தான் நிறுவனங்கள் உள்ளன.

சிறிய நிறுவனங்களாக இருந்தாலும் சரி, பெரிய நிறுவனங்களாக இருந்தாலும் சரி, இந்த நோய் தொற்றால், நீண்டகால பின்னடைவை சந்திக்கும் என, தெரிகிறது.இந்த துறையில், மூன்றில் ஒரு பங்கு நிறுவனங்கள் மூடப்பட்டால் ஆச்சரியமில்லை.இவ்வாறு, அவர் கூறி உள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)