பதிவு செய்த நாள்
19 ஏப்2020
02:58
புதுடில்லி : ஹூண்டாய் நிறுவனம், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த, ‘ஏர் லிக்யுட் மெடிக்கல் சிஸ்டம்ஸ்’ எனும் நிறுவனத்துடன் இணைந்து, வென்டிலேட்டர் தயாரிப்பில் இறங்கியுள்ளது. வாகன தயாரிப்பு நிறுவனமான, ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், கொரோனா தொற்றால், இந்தியாவில் பாதிக்கப்படுபவர்களுக்கு தேவைப்படும் வென்டிலேட்டர் சாதனங்களை தயாரிப்பதற்காக, ஏர் லிக்யுட் நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளது.
இந்நிறுவனத்துடன் இணைந்து, முதற்கட்டமாக, ஆயிரம் வென்டிலேட்டர்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இது குறித்து, ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, எஸ்.எஸ்.கிம், ‘‘கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு, உயிர் காக்கும் சாதனமாக, வெண்டிலேட்டர்கள் உள்ளன. ‘‘எனவே இந்த வென்டிலேட்டர் சாதனங்கள், இந்தியாவில் தட்டுப்பாடு இன்றி கிடைப்பதற்கு உதவும் முயற்சியில், ஹூண்டாய் இறங்கி உள்ளது’’ என தெரிவித்துள்ளார்.
மேலும் இம்முயற்சி குறித்து, ஏர் லிக்யுட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், அனில் குமார் பேசும்போது, ‘‘ஹூண்டாய் மோட்டாருடன் இணைந்து, வைரஸ் தாக்குதலுக்கு எதிராக நாங்கள் எடுத்திருக்கும் முயற்சி, நல்ல பலனை தரும் என எதிர்பார்க்கிறோம். வென் டிலேட்டர் தயாரிப்பதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு வசதிகள் கொண்ட உலகளவிலான சில நிறுவனங்களில் நாங்களும் ஒன்று’’ என தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|