பதிவு செய்த நாள்
19 ஏப்2020
03:04
புதுடில்லி : நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான, எச்.டி.எப்.சி., வங்கியின் நிகர லாபம், நான்காவது காலாண்டில், 15.4 சதவீதம் அதிகரித்து உள்ளது.
எச்.டி.எப்.சி., வங்கியின் நிகர லாபம், கடந்த நிதியாண்டின், நான்காவது காலாண்டில், 15.4 சதவீதம் அதிகரித்து, 7,280.22 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இதுவே, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில், நிகர லாபம், 6,300 கோடி ரூபாயாக இருந்தது. வங்கியின் வருவாய், கடந்த மார்ச் காலாண்டில், 38 ஆயிரத்து, 287 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டிற்கான டிவிடெண்டு எதையும் வழங்கப் போவதில்லை என வங்கி தெரிவித்துள்ளது.
வங்கிகள், டிவிடெண்டு களை வழங்காமல், மூலதனத்தை பாதுகாத்துக்கொள்ளும்படி அண்மையில் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது.இதனையடுத்து, நேற்று நடைபெற்ற வங்கியின் இயக்குனர்கள் குழு கூட்டத்தில், டிவிடெண்டு குறித்த தீர்மானம் எதுவும் முன்மொழியப்படவில்லை.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|