பதிவு செய்த நாள்
23 ஏப்2020
04:11
புதுடில்லி : காப்பீட்டு நிறுவனங்கள், மருத்துவ காப்பீட்டுக்கான பிரீமிய தொகையை, தவணை முறையில் பெற்று கொள்ள, காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான, ஐ.ஆர்.டி.ஏ.ஐ., அனுமதி வழங்கி உள்ளது.
இது குறித்து, ஐ.ஆர்.டி.ஏ.ஐ., மேலும் தெரிவித்துள்ளதாவது:தற்போதுள்ள இக்கட்டான சூழலை மனதில் கொண்டு, காப்பீட்டு நிறுவனங்கள், மருத்துவ காப்பீட்டுக்கான பிரீமிய தொகையை, தவணை முறையில் காப்பீடுதாரர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். அதேசமயம், காப்பீட்டு திட்டங்களில் அனுமதிக்கப்பட்ட அடிப்படை பிரீமிய பட்டியல் மற்றும் கட்டணங்களில் எந்தவித மாறுதலும் கிடையாது. மேலும், பிரீமியம் செலுத்துவதற்கான தவணைக் காலம், மாதம், காலாண்டு, அரையாண்டு என இருக்கும்.
பிரீமியத்துக்கான தவணை வசதி, நிரந்தரமான அம்சமாகவோ அல்லது 12 மாத காலத்துக்கு தற்காலிக நிவாரணமாகவோ வழங்கப்படலாம்.மருத்துவ காப்பீட்டுக்கான பிரீமியத்துக்கான தவணை வசதி குறித்து, அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் அவற்றின் இணைய தளத்தில் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, ஐ.ஆர்.டி.ஏ.ஐ., தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|