பதிவு செய்த நாள்
23 ஏப்2020
04:12
புதுடில்லி : நாடு முடக்கப்பட்டிருக்கும் நிலையில், உணவுக்காக தவிப்பவர்களுக்கும், நோய் தடுப்பில் முன்னணியிலிருந்து பணியாற்றுபவர்களுக்கும் உதவும் வகையில், மூன்று கோடிக்கும் அதிகமான உணவுகளை வழங்க, ரிலையன்ஸ் அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.
இதற்காக ரிலையன்ஸ் அறக்கட்டளை, ’மிஷன் அன்ன சேவா’ எனும் திட்டத்தை விரிவுபடுத்தி இருக்கிறது.ரிலையன்ஸ் அறக்கட்டளை, ஏற்கெனவே நாட்டிலுள்ள, 68 மாவட்டங்களில், இரண்டு கோடிக்கும் அதிகமான உணவுகளை வினியோகித்திருக்கிறது.இது குறித்து, ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனரும், தலைவருமான நீடா அம்பானி கூறியதாவது:ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், அடுத்த வேளை உணவுக்காக எண்ணற்ற மக்கள் தவிக்கிறார்கள்.எனவே, அவர்களுக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காக, ’மிஷன் அன்ன சேவா’ திட்டத்தை தொடங்கி உள்ளோம்.
இதன் மூலம் ஏழைகளுக்கும், நோய் தடுப்புக்காக களத்தில் இருப்பவர்களுக்கும் உணவு கிடைக்கும் வகையில், மூன்று கோடிக்கும் அதிகமாக உணவுகளை வழங்க உள்ளோம். உலகளவில், வேறு எந்த பெருநிறுவன அறக்கட்டளை அமைப்பும் மேற்கொள்ளாத மிகப்பெரிய திட்டமாகும் இது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|