பதிவு செய்த நாள்
29 ஏப்2020
23:11
மும்பை : நாட்டில் முடக்கத்தை நீக்கிய பிறகும், வாகன விற்பனையில் எந்த முன்னேற்றமும் இருக்காது என, கிரிசில் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
தடை நீங்கிய பிறகும், நுகர்வோர்களிடம் முகவர்களை நாடிச் செல்வது குறித்த தயக்கம் நீடிக்கும். முகவர்களிடம் மட்டுமின்றி, மால்கள், சந்தைகள், திரையரங்கங்கள் ஆகியவற்றுக்கு செல்வதில் கூட அச்சத்துடன் இருப்பர். இதன் காரணமாக, வாகன விற்பனையில் முன்னேற்றம் எதுவும் இருக்காது என, கிரிசில் தெரிவித்துள்ளது.மேலும், பயணியர் வாகன விற்பனையில் பாதி அளவுக்கும், இருசக்கர வாகன விற்பனையில், மூன்றில் ஒரு பகுதி அளவுக்கும் விற்பனையில் பாதிப்பை சந்திக்கக் கூடும் என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே மாதம், 3ம் தேதிக்கு பின், தடை நீக்கப்பட்டாலும் கூட, முகவர்களின் இயல்பான நடவடிக்கை என்பது, அவர்கள் இருக்கும் இடத்தை பொறுத்தே அமையும்.பாதிப்பு அதிகம் இருக்கும் பகுதிகளில், முகவர்களால் செயல்பட இயலாது. மேலும், மாநில, மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியை பொறுத்தே இயங்க முடியும் என்றும் ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது.இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|