பதிவு செய்த நாள்
01 மே2020
01:42
புதுடில்லி : இதுவரை சாமானியர்களின் சம்பளத்தில் பாதிப்பை ஏற்படுத்தி வந்த கொரோனா, இப்போது, முகேஷ் அம்பானியின் சம்பளத்திலும் முழுதாக கை வைத்துவிட்டது.
நாடு முடக்கப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்பையடுத்து, மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான, ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ சம்பளக் குறைப்பு நடவடிக்கையில் இறங்கி உள்ளது. அதன் ஊழியர்களின் சம்பளத்தில், 10 சதவீதம் முதல், 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டு உள்ளதாக அறிவித்து உள்ளது.இந்த சம்பளக் குறைப்பு நடவடிக்கை, ஊழியர்களுக்கு மட்டு மின்றி, நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி வரை நீண்டு உள்ளது. முகேஷ் அம்பானி, அவரது சம்பளம் முழுதையும் விட்டுக் கொடுக்க சம்மதித்து உள்ளார்.
கச்சா எண்ணெய் முதல், தொழில்நுட்பம் வரை அனைத்து பிரிவுகளிலும் பரவியிருக்கும் ரிலையன்ஸ் நிறுவனம், அதன் ஊழியர்களுக்கு கடிதங்கள் மூலம் சம்பளக் குறைப்பு குறித்து அறிவித்துள்ளது. இதன்படி, 15 லட்சத்துக்கும் குறைவாக சம்பளம் வாங்குபவர்களுக்கு, சம்பளம் குறைக்கப்படவில்லை. அதற்கு அதிகமாக வாங்குபவர்களுக்கு, 10 சதவீதம் குறைக்கப்படுகிறது. முகேஷ் அம்பானி, அவர் வாங்கும், 15 கோடி ரூபாயை முழுதுமாக விட்டுக் கொடுத்து விடுகிறார்.
நிர்வாக இயக்குனர், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட, ரிலையன்ஸ் நிர்வாகக் குழுவில் உள்ள உறுப்பினர்களின் ஊதியம், 30 முதல், 50 சதவீதம் வரை குறைக்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|