பதிவு செய்த நாள்
01 மே2020
22:54
புதுடில்லி:‘மத்திய தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தக துறை’ அமைத்திருந்த, கட்டுப்பாட்டு அறை மூலமாக, ஏப்., 28ம் தேதி வரை, 1,739 பிரச்னைகள் தீர்த்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச், 26ல், மத்திய தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தக துறை, தொழில் மற்றும் வர்த்தகம் குறித்த பிரச்னைகளை கண்காணிக்க, கட்டுப்பாட்டு அறை ஒன்றை துவக்கியது.
கோரிக்கைகள்
இந்த கட்டுப்பாட்டு அறையின் கவனத்துக்கு வரும் பிரச்னைகள், குறிப்பிட்ட மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகம், காவல் துறை உள்ளிட்டவற்றுடன் கலந்து, தீர்த்து வைக்கப்படும்.
குறிப்பாக, அத்தியா வசிய பொருட்கள் சம்பந்த மான உள்நாட்டு வர்த்தகம், தயாரிப்பு, வினியோகம், போக்குவரத்து ஆகியவற்றில் ஏற்படும் பிரச்னைகளை தீர்த்து, வினியோகம் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளும்.கடந்த ஏப்ரல், 28ம் தேதி வரை பதிவான, 1,962 கோரிக்கைகளில், 1,739 கோரிக்கைகள் தீர்க்கப்பட்டுவிட்டன; 223 பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.இவற்றில், 1,000த்துக்கும் மேற்பட்டவை, டில்லி, மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம், ஹரியானா, குஜராத் ஆகிய ஐந்து மாநிலங்களிலிருந்து வந்தவையாகும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி எண்
தயாரிப்பு, போக்குவரத்து நிறுவனங்கள் வினியோகஸ்தர்கள், மொத்த விலை விற்பனையாளர்கள், மின்னணு வர்த்தக நிறுவனங்கள் பிரச்னை எழுந்தால், 91 11 2306 2487 என்ற தொலைபேசி எண்ணில், காலை, 8:00 முதல், மாலை, 6:00 மணி வரை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்.அல்லது controlroom-dpiit@gov.in. என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|