பதிவு செய்த நாள்
06 மே2020
23:17
புதுடில்லி:‘பஜாஜ் கன்ஸ்யூமர் கேர்’ நிறுவனம், சமீபத்தில், கைகளை கிருமிகளிலிருந்து காக்கும் வகையிலான, ‘பஜாஜ் நோ மார்க்ஸ் ஹேண்டு சானிடைசரை’ அறிமுகம் செய்துள்ளது.
சோப்பு, நீர் எதுவுமின்றி, 99.9 சதவீத கிருமிகளை அழிக்கும் வகையில், 70 சதவீத ஆல்கஹால் கொண்ட சானிடைசர் இது.கற்றாழை மற்றும் வேம்பு சாறு கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் இது, 50, 100, 200 மி.லி., பாட்டில்களில் தனிநபர்களுக்கும், மருத்துவமனை, அலுவலக பயன்பாட்டுக்கு, 5 லிட்டர் அளவிலும் கிடைக்கிறது.விலை, 50 மி.லி., 25 ரூபாய்; 100 மி.லி., 50 ரூபாய்; 200 மி.லி., 100 ரூபாய்; 5 லிட்டர் 2,500 ரூபாய்.
இது குறித்து, பஜாஜ் கன்ஸ்யூமர் கேர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுமித் மல்கோத்ரா கூறியதாவது:கொரோனா பாதிப்பால், கைகளில் பயன்படுத்தப்படும் கிருமி நாசினிகளுக்கான தேவை பலமடங்கு அதிகரித்துள்ளது. கண்ணுக்கு தெரியாத எதிரியை முதல் வரிசையில் நின்று தடுக்கும் முயற்சியில், பஜாஜ் நிறுவனமும் இணைந்துள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|