பதிவு செய்த நாள்
18 மே2020
08:51
கொரோனா வைரசின் தாக்கம் ஏற்கனவே பல துறைகளில் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பின்பற்றப்படும், வீட்டில் இருந்தே பணி புரியும் வாய்ப்பு, வீடியோ சந்திப்புகள் தவிர, அலுவலக சூழலிலும் முற்றிலுமாக மாறலாம் என்கின்றனர். கொரோனாவுக்கு பிந்தைய உலகில், பாதுகாப்பான பணியிடத்தை உறுதி செய்வதற்காக, அலுவலக சூழலில் பல்வேறு மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என வல்லுனர்கள் கருதுகின்றனர்:
இங்கே திரும்பவும்: நிறுவனங்கள் மீண்டும் பணியை துவக்கும் போது, ஊழியர்களுக்கான இடங்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டு, எல்லா இடங்களிலும் எப்படி செயல்பட வேண்டும் என தெளிவான காட்சி விளக்கம் மூலம் வழிகாட்டப்படும். எங்கு நிற்க வேண்டும், எங்கு திரும்ப வேண்டும் என எல்லாவற்றுக்கும் வழிகாட்டுதல் இருக்கும்.
தானியங்கி மயம்: ஊழியர்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பதை உறுதி செய்யும் வகையில், தானியங்கி வசதி அதிகமாக்கப்படலாம். அலுவகத்தில் நுழைய, கதவை திறக்க கைப்பிடியை பயன்படுத்துவது போன்றவை தவிர்க்கப்படும். மனிதர்கள் வரும் போது தானாக திறக்கும் கதவுகள் பயன்படுத்தப்படும்.
கண்காணிப்பு: வைரஸ் அச்சம் விலகும் வரை, அனைவரும் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தாக வேண்டும். இதை உறுதி செய்ய, அலுவலக சூழல்களில் தொழில்நுட்ப கண்காணிப்பு அதிகமாகலாம். ஸ்மார்ட்போன் மூலம் பின் தொடரப்படும் ஊழியர்கள், தனி மனித இடைவெளியை மீறும் போது கண்டறிந்து எச்சரிக்கப்படுவர்.
மீண்டும் கேபின்கள்: அண்மை ஆண்டுகளாக வர்த்தக நிறுவனங்களில், ‘ஓபன் ஆபிஸ்’ எனப்படும் திறந்த அமைப்பு கொண்டு அலுவலக கருத்தாக்கம் பிரபலமாகி வருகிறது. ஆனால், இந்த சூழலில், அதிக ஊழியர்கள் ஒரே இடத்தில் குவியும் வாய்ப்புள்ளதால், மீண்டும் கேபின் தடுப்புகள் கொண்ட அலுவலக முறை அமலுக்கு வரலாம்.
வாடகை முறை: இதே போல, பலரும் இணைந்து பணியாற்றும் ‘கோ- ஒர்கிங் ஸ்பேஸ்’ இடங்களுக்கான தேவை குறையலாம். இத்தகைய இடங்களில், பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகமாகலாம். அலுவலக கட்டடங்களை பொறுத்தவரை, நீண்ட கால குத்தகைகளை பலரும் தவிர்க்க முற்படலாம். ஒப்பந்தங்கள் மாற்றி அமைக்கப்படலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|