சிவப்பு மண்டலங்களில் சிக்கிய கடன் நிலுவை  72 லட்சம் கோடி ரூபாய் வசூலாகாமல்  திணறல்சிவப்பு மண்டலங்களில் சிக்கிய கடன் நிலுவை 72 லட்சம் கோடி ரூபாய் வசூலாகாமல் ... ...  கைகொடுக்குமா சுயசார்பு திட்டம்? கைகொடுக்குமா சுயசார்பு திட்டம்? ...
அலுவலக பணியிட சூழலில் காத்திருக்கும் மாற்றங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மே
2020
08:51

கொரோனா வைரசின் தாக்கம் ஏற்கனவே பல துறைகளில் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பின்பற்றப்படும், வீட்டில் இருந்தே பணி புரியும் வாய்ப்பு, வீடியோ சந்திப்புகள் தவிர, அலுவலக சூழலிலும் முற்றிலுமாக மாறலாம் என்கின்றனர். கொரோனாவுக்கு பிந்தைய உலகில், பாதுகாப்பான பணியிடத்தை உறுதி செய்வதற்காக, அலுவலக சூழலில் பல்வேறு மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என வல்லுனர்கள் கருதுகின்றனர்:

இங்கே திரும்பவும்: நிறுவனங்கள் மீண்டும் பணியை துவக்கும் போது, ஊழியர்களுக்கான இடங்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டு, எல்லா இடங்களிலும் எப்படி செயல்பட வேண்டும் என தெளிவான காட்சி விளக்கம் மூலம் வழிகாட்டப்படும். எங்கு நிற்க வேண்டும், எங்கு திரும்ப வேண்டும் என எல்லாவற்றுக்கும் வழிகாட்டுதல் இருக்கும்.

தானியங்கி மயம்: ஊழியர்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பதை உறுதி செய்யும் வகையில், தானியங்கி வசதி அதிகமாக்கப்படலாம். அலுவகத்தில் நுழைய, கதவை திறக்க கைப்பிடியை பயன்படுத்துவது போன்றவை தவிர்க்கப்படும். மனிதர்கள் வரும் போது தானாக திறக்கும் கதவுகள் பயன்படுத்தப்படும்.

கண்காணிப்பு: வைரஸ் அச்சம் விலகும் வரை, அனைவரும் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தாக வேண்டும். இதை உறுதி செய்ய, அலுவலக சூழல்களில் தொழில்நுட்ப கண்காணிப்பு அதிகமாகலாம். ஸ்மார்ட்போன் மூலம் பின் தொடரப்படும் ஊழியர்கள், தனி மனித இடைவெளியை மீறும் போது கண்டறிந்து எச்சரிக்கப்படுவர்.

மீண்டும் கேபின்கள்: அண்மை ஆண்டுகளாக வர்த்தக நிறுவனங்களில், ‘ஓபன் ஆபிஸ்’ எனப்படும் திறந்த அமைப்பு கொண்டு அலுவலக கருத்தாக்கம் பிரபலமாகி வருகிறது. ஆனால், இந்த சூழலில், அதிக ஊழியர்கள் ஒரே இடத்தில் குவியும் வாய்ப்புள்ளதால், மீண்டும் கேபின் தடுப்புகள் கொண்ட அலுவலக முறை அமலுக்கு வரலாம்.

வாடகை முறை: இதே போல, பலரும் இணைந்து பணியாற்றும் ‘கோ- ஒர்கிங் ஸ்பேஸ்’ இடங்களுக்கான தேவை குறையலாம். இத்தகைய இடங்களில், பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகமாகலாம். அலுவலக கட்டடங்களை பொறுத்தவரை, நீண்ட கால குத்தகைகளை பலரும் தவிர்க்க முற்படலாம். ஒப்பந்தங்கள் மாற்றி அமைக்கப்படலாம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)