பதிவு செய்த நாள்
15 மே2020
23:15
மும்பை:வங்கிகளின் நிலுவைக் கடனில், 72 சதவீதமும்; டெபாசிட்டில், 62 சதவீதமும் அதிக கொரோனா பாதிப்புக்கு உள்ளான, சிவப்பு மண்டலங்களில் இருப்பதாக, 'கேர் ரேட்டிங்' நிறுவனத்தின் அறிக்கை ஒன்று தெரிவித்து உள்ளது.
அரசு, கொரோனா பாதிப்பின் தீவிரத்தை பொறுத்து, நாட்டின் பகுதிகளை, சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என வகைப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு, டிசம்பர் மாத நிலவரப்படி, அனைத்து
வங்கிகளின் ஒட்டுமொத்த கடன் நிலுவை தொகை, 100.7 லட்சம் கோடி ரூபாய். அதே போல் டெபாசிட், 132.9 லட்சம் கோடி ரூபாய்.
கேர் ரேட்டிங்
இதில், 72 லட்சம் கோடி ரூபாய் கடன் நிலுவை தொகையும், 82.5 லட்சம் கோடி ரூபாய்
டெபாசிட்டும் சிவப்பு மண்டலங்களில் உள்ளன.வங்கிகளின் கடனும், டெபாசிட்டும்
பெருமளவில் இந்த சிவப்பு மண்டலங்களில் இருப்பதால், அந்த பகுதிகளில் பொருளாதார செயல்பாடுகள் துவங்கப்படாவிட்டால், அது வங்கிகளுக்கு அதிக அழுத்தம் தருவதாக அமைந்து விடும் என, கேர் ரேட்டிங் தெரிவித்துள்ளது.
சிவப்பு மண்டலங்களில் உள்ள கடன் தொகையை மட்டும் பொறுத்தவரை, நாட்டின் மேற்கு பகுதிகளில் தான் கடன் நிலுவை தொகை அதிகம் உள்ளது. அப்பகுதியில், 41 சதவீதம்
இருக்கிறது.இதையடுத்து, தெற்கு பகுதியில் உள்ள சிவப்பு மண்டலங்களில், 24 சதவீதம்
உள்ளது. வட பகுதியை பொறுத்தவரை, 23 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
ஆய்வறிக்கை
நாட்டின் மேற்கு பகுதியில், அங்குள்ள சிவப்பு மண்டல கடன் நிலுவையில், 30 சதவீதம் மும்பை மற்றும் அதன் இரு மாவட்டங்களில் உள்ளது. வங்கிகளின் மொத்த கடன்
நிலுவையில், 21 சதவீதமும் இங்கு தான் உள்ளது.ஆரஞ்சு மண்டலத்தை பொறுத்தவரை, தெற்கு பகுதியில் அதிக அளவு உள்ளது.இங்கு கடனில், 43 சதவீதம் உள்ளது.
இதையடுத்து, 25 சதவீதத்துடன் வட பகுதி உள்ளது.பச்சை மண்டலத்தில், தெற்கு பகுதியில் கடன் நிலுவை, 31 சதவீதமாக அதிகளவில் உள்ளது. இதையடுத்து, மத்திய பகுதி,
21 சதவீதத்துடனும், மேற்கு பகுதி, 17 சதவீதத்துடனும் உள்ளன.இவ்வாறு கேர் ரேட்டிங் நிறுவனம் தன் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
வங்கிகளின் கடனும், டெபாசிட்டும் பெருமளவில் இந்த சிவப்பு மண்டலங்களில் இருப்பதால், அந்த பகுதிகளில் பொருளாதார செயல்பாடுகள் துவங்கப்படாவிட்டால், அது வங்கிகளுக்கு அதிக அழுத்தம் தருவதாக அமைந்து விடும்.
-கேர் ரேட்டிங்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|