முழுமையாக வராத மொத்தவிலை பணவீக்கம் முழுமையாக வராத மொத்தவிலை பணவீக்கம் ...  அலுவலக பணியிட சூழலில்  காத்திருக்கும் மாற்றங்கள் அலுவலக பணியிட சூழலில் காத்திருக்கும் மாற்றங்கள் ...
சிவப்பு மண்டலங்களில் சிக்கிய கடன் நிலுவை 72 லட்சம் கோடி ரூபாய் வசூலாகாமல் திணறல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மே
2020
23:15

மும்பை:வங்கிகளின் நிலுவைக் கடனில், 72 சதவீதமும்; டெபாசிட்டில், 62 சதவீதமும் அதிக கொரோனா பாதிப்புக்கு உள்ளான, சிவப்பு மண்டலங்களில் இருப்பதாக, 'கேர் ரேட்டிங்' நிறுவனத்தின் அறிக்கை ஒன்று தெரிவித்து உள்ளது.

அரசு, கொரோனா பாதிப்பின் தீவிரத்தை பொறுத்து, நாட்டின் பகுதிகளை, சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என வகைப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு, டிசம்பர் மாத நிலவரப்படி, அனைத்து
வங்கிகளின் ஒட்டுமொத்த கடன் நிலுவை தொகை, 100.7 லட்சம் கோடி ரூபாய். அதே போல் டெபாசிட், 132.9 லட்சம் கோடி ரூபாய்.

கேர் ரேட்டிங்


இதில், 72 லட்சம் கோடி ரூபாய் கடன் நிலுவை தொகையும், 82.5 லட்சம் கோடி ரூபாய்
டெபாசிட்டும் சிவப்பு மண்டலங்களில் உள்ளன.வங்கிகளின் கடனும், டெபாசிட்டும்
பெருமளவில் இந்த சிவப்பு மண்டலங்களில் இருப்பதால், அந்த பகுதிகளில் பொருளாதார செயல்பாடுகள் துவங்கப்படாவிட்டால், அது வங்கிகளுக்கு அதிக அழுத்தம் தருவதாக அமைந்து விடும் என, கேர் ரேட்டிங் தெரிவித்துள்ளது.

சிவப்பு மண்டலங்களில் உள்ள கடன் தொகையை மட்டும் பொறுத்தவரை, நாட்டின் மேற்கு பகுதிகளில் தான் கடன் நிலுவை தொகை அதிகம் உள்ளது. அப்பகுதியில், 41 சதவீதம்
இருக்கிறது.இதையடுத்து, தெற்கு பகுதியில் உள்ள சிவப்பு மண்டலங்களில், 24 சதவீதம்
உள்ளது. வட பகுதியை பொறுத்தவரை, 23 சதவீதம் என்ற அளவில் உள்ளது.


ஆய்வறிக்கை

நாட்டின் மேற்கு பகுதியில், அங்குள்ள சிவப்பு மண்டல கடன் நிலுவையில், 30 சதவீதம் மும்பை மற்றும் அதன் இரு மாவட்டங்களில் உள்ளது. வங்கிகளின் மொத்த கடன்
நிலுவையில், 21 சதவீதமும் இங்கு தான் உள்ளது.ஆரஞ்சு மண்டலத்தை பொறுத்தவரை, தெற்கு பகுதியில் அதிக அளவு உள்ளது.இங்கு கடனில், 43 சதவீதம் உள்ளது.


இதையடுத்து, 25 சதவீதத்துடன் வட பகுதி உள்ளது.பச்சை மண்டலத்தில், தெற்கு பகுதியில் கடன் நிலுவை, 31 சதவீதமாக அதிகளவில் உள்ளது. இதையடுத்து, மத்திய பகுதி,
21 சதவீதத்துடனும், மேற்கு பகுதி, 17 சதவீதத்துடனும் உள்ளன.இவ்வாறு கேர் ரேட்டிங் நிறுவனம் தன் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.


வங்கிகளின் கடனும், டெபாசிட்டும் பெருமளவில் இந்த சிவப்பு மண்டலங்களில் இருப்பதால், அந்த பகுதிகளில் பொருளாதார செயல்பாடுகள் துவங்கப்படாவிட்டால், அது வங்கிகளுக்கு அதிக அழுத்தம் தருவதாக அமைந்து விடும்.

-கேர் ரேட்டிங்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)