பதிவு செய்த நாள்
18 மே2020
08:56
கொரோனா தொடர்பான மக்கள் அச்சத்தை பயன்படுத்தி, போலி, 'இ - மெயில்'களை, 'கிளிக்' செய்ய வைத்து, வலை விரிக்கும் மோசடி முயற்சிகள் அதிகரித்துஇருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இ - மெயில் மூலம் வலை விரித்து, போலி இணையதளங்களுக்கு அழைத்துச் சென்று ஏமாற்றும் சைபர் குற்றவாளிகளின் உத்தி, பிஷிங் மோசடி என குறிப்பிடப்படுகிறது. கொரோனா சூழலில், இத்தகைய மோசடி அதிகரித்திருப்பதாக, சைபர் பாதுகாப்பு சேவை வழங்கி வரும், 'மெக் அபி' நிறுவனம் தெரிவித்துள்ளது.இ - மெயில் மற்றும் இணையதளங்கள் மூலமாக கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை அளிப்பதாக கவனத்தில் ஈர்த்து, பின்னர் நிதி மோசடியில் சைபர் குற்றவாளிகள் ஈடுபட்டு வருவதாகவும், இந்தியாவிலும் இது போன்ற மோசடி அதிகரித்து இருப்பதாகவும், இந்நிறுவனம் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
'லாக்டவுன்' காரணமாக பலரும், 'ஆன்லைன்' சேவைகளை பயன்படுத்துவதை, சைபர் குற்றவாளிகள் சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றனர். இத்தகைய மோசடிக்கு இலக்காவதை தடுக்க, 'ஸ்மார்ட்போன்' மற்றும் இணைய சேவைகளை வங்கி கணக்கு போல பாதுகாப்பாக இயக்க வேண்டும் என, ஆலோசனை கூறப்படுகிறது.நிதிச்சேவை செயலிகளை, அதிகாரப்பூர்வ இணையதளங்களில் இருந்து மட்டுமே தரவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|