பதிவு செய்த நாள்
22 மே2020
11:12
புதுடில்லி : ரிலையன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த, ’நவ்புளோட்ஸ்’ நிறுவனம், தொலைதொடர்பு வசதிகள் மூலம் மருத்துவ சேவைகளை பெற உதவும் வணிகத்தில் இறங்கி
உள்ளது.
‘நவ்புளோட்ஸ் டெக்னாலஜிஸ்’ நிறுவனத்தை, கடந்த ஆண்டில், முகேஷ் அம்பானி தலைமையிலான, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கையகப்படுத்தியது. இந்நிலையில், இப்போது நவ்புளோட்ஸ், டெலிமெடிசின் சேவையில் இறங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.மேலும், அடுத்த மூன்று முதல் நான்கு மாதங்களில், இந்நிறுவன சேவையில், ஒரு லட்சம் மருத்துவர்கள் இணைவர் எனவும் தெரிவித்துள்ளது.கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவர்களை நேரடியாக அணுகுவது என்பது தற்போது சிரமமானதாக மாறி இருக்கிறது. இப்பிரச்னையை தீர்க்கும் வகையில், டெலிமெடிசின் சேவையை வழங்க முன்வந்துள்ளது, நவ்புளோட்ஸ் நிறுவனம்.இதன் தொடர்ச்சியாக, மின்னணு மருந்தகம், மருத்துவ பரிசோதனை மற்றும் உடல் ஆரோக்கியம் ஆகிய சேவைகளையும் படிப்படியாக வழங்க திட்டமிட்டு வருகிறது.
இது குறித்து, நவ்புளோட்ஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவு தலைவர் நிகில் சால்கர் கூறியதாவது:தற்சமயம், 6 ஆயிரம் மருத்துவர்கள் எங்களுடன் உள்ளனர். மருத்துவ உதவி தேவைப்படுவோர் ஆன்லைன் வீடியோ மூலமாக, மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.இதற்காக தனியாக செயலி எதையும் தரவிறக்கம் செய்ய வேண்டியதில்லை. மருத்துவரிடமிருந்து வாட்ஸ் ஆப் உள்ளிட்ட குறுஞ்செய்திகளுக்கு இணைப்பு வழங்கப்படும். அதை இணையதளம் மூலம் அணுகிக் கொள்ளலாம். தேவையான மருத்துவர்களை ஆன்லைன் தேடல் மூலம் தேர்வு செய்து கொள்ள முடியும். இவ்வாறு அவர்கூறியுள்ளார். மருத்துவர்களிடம் இந்த சேவைக்காக , ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை, நவ்புளோட்ஸ் பெற்றுக்கொள்ளும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|