பதிவு செய்த நாள்
27 மே2020
00:13
மும்பை:அண்மைக் காலமாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான, ‘ஜியோ பிளாட்பார்மில்’ மேற்கொள்ளப்பட்டு வரும் முதலீடுகள் முக்கிய செய்தியாகி வருகின்றன.
பெரும் தொகை
பேஸ்புக் சில்வர் லேக், ஜெனரல் அட்லான்டிக், கே.கே.ஆர்., என, பல நிறுவனங்கள் தொடர்ந்து பெரும் தொகையை ஜியோவில் முதலீடு செய்துவருகின்றன.இதற்கு நடுவே, முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, ஜியோ பிளாட்பார்ம் நிறுவனத்தின் கூடுதல் இயக்குனராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
மத்திய அரசு, ஊரடங்கு உத்தரவை பிறப்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, ஆனந்த் இந்த பதவியை ஏற்றுக்கொண்டுஇருக்கிறார்.
சமூகப் பணி
ஆனந்த் அம்பானியின் உடன்பிறப்புகளான ஆகாஷ், இஷா ஆகியோர், கடந்த, 2014ம் ஆண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தொலைதொடர்பு மற்றும் சில்லரை வணிகத்தில் இயக்குனர்களாக பொறுப்பேற்றனர்.இதற்கிடையில், ஆனந்த், அவரது தாய் நிடா அம்பானியுடன் இணைந்து, ஐ.பி.எல்., விளையாட்டுகளில் தன்னை ஈடுபடுத்தி வந்தார். மேலும் சில சமூகப் பணிகளிலும் ஈடுபாடு காட்டி வந்தார்.இந்நிலையில், தற்போது, ஜியோ பிளாட்பார்ம் நிறுவனத்தின் இயக்குனராக பொறுப்பேற்றுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|