பதிவு செய்த நாள்
26 மே2020
23:47
மும்பைகடந்த நிதியாண்டின் இறுதி காலாண்டில், உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 1.2 சதவீதமாக இருக்கும் என்று, எஸ்.பி.ஐ.,யின் ஆராய்ச்சி அறிக்கையான, ’எகோரேப்’ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, ஆய்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:\
மார்ச் மாதத்துடன் முடிவடைந்த, கடந்த நிதியாண்டின் இறுதி காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 1.2 சதவீதமாக இருக்கும். மார்ச் மாத இறுதியில், கொரோனா தாக்கத்தால் நாடு முடக்கப்பட்டது தான் இந்த சரிவுக்கு முக்கிய காரணம்.
மேலும், கடந்த நிதியாண்டில், உள்நாட்டின் உற்பத்தி வளர்ச்சி, 4.2 சதவீதமாக இருக்கும். நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி, ’மைனஸ்’ 6.8 சதவீதமாக சரிவை காணும்.இவ்வாறு எஸ்.பி.ஐ., தெரிவித்துள்ளது.இம்மாதம், 29ம் தேதியன்று, கடந்த நிதியாண்டின் இறுதி காலாண்டு முடிவை, மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், வளர்ச்சி, ஏழு ஆண்டுகளில் இல்லாத வகையில், 4.7 சதவீதமாக குறைந்திருந்தது.முதல் மற்றும் இரண்டாவது காலாண்டுகளில் இது, 5.1 மற்றும் 5.6 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மார்ச் மாதத்தில், கடைசி ஏழு நாட்களில், ஊரடங்கால் 1.4 லட்சம் கோடி ரூபாய் இழப்பை நாடு சந்தித்திருக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, எஸ்.பி.ஐ., அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|