வளர்ச்சி சகஜ நிலைக்கு திரும்பும்வளர்ச்சி சகஜ நிலைக்கு திரும்பும் ...  தாயகம் திரும்பியவர்களுக்கு உதவக் காத்திருக்கும்  ‘ஸ்வதேஸ்’ வலைதளம்! தாயகம் திரும்பியவர்களுக்கு உதவக் காத்திருக்கும் ‘ஸ்வதேஸ்’ வலைதளம்! ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
கடன் தவணை சலுகை : புதிய கடன் பெறுவதை பாதிக்குமா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2020
13:18

கடன் தவணை செலுத்துவதை தள்ளி வைக்கும் சலுகை வசதி, வங்கிகளிடம் இருந்து புதிதாக கடன் பெறுவதை பாதிக்கலாம் என கருதப்படுகிறது.கொரோனா கால பாதிப்பை சமாளிக்க உதவும் வகையில், ரிசர்வ் வங்கி அறிவித்த கடன் தவணை தள்ளிவைப்பு சலுகை, ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த காலத்திற்கு வட்டி பொருந்தும் என்பதால், தள்ளிவைப்பு சலுகையை நாடுவதால், கடன் சுமை அதிகரிக்கும் என்று ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், தவணை தள்ளிவைப்பு சலுகையை நாடுவது, புதிய சிக்கலை ஏற்படுத்த வாய்ப்பிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த வசதியை நாடுபவர்களுக்கு, வங்கிகள் புதிதாக கடன் கொடுக்க தயக்கம் காட்டலாம் என கூறப்படுகிறது. ஒரு சில வங்கிகள் ஏற்கனவே அங்கீகரித்த கடனை கூட நிறுத்தி வைத்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.


பாதிப்பு ஏன்?

கடன் தவணை தள்ளிவைப்பை அறிவித்த போதே, இதனால் ‘கிரெடிட் ஸ்கோர்’ எனப்படும் கடன் தகுதி மதிப்பெண் பாதிக்கப்படாது என ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. இந்நிலையில், வங்கிகள் இந்த வசதியை நாடுபவர்களுக்கு புதிதாக கடன் கொடுக்க தயக்கம் காட்டுவது ஏன் எனும் கேள்வி எழலாம். வங்கிகள் கடன் கொடுக்கும் போது, கடனை திரும்பி செலுத்தும் ஆற்றலை முக்கியமாக கருதுகின்றன. இதை அளவிட கிரெடிட் ஸ்கோரும் உதவுகிறது.


தற்போது, கடன் தவணையை தள்ளி வைக்கும் வசதியை நாடுபவர்கள், உடனடியாக பணத்தை செலுத்த முடியாத நிலையில் இருப்பவர்கள் என கருதப்பட வாய்ப்பிருப்பதால், அவர்களின் திரும்ப செலுத்தும் ஆற்றல் கேள்விக்குள்ளாகிறது. எனவே, வங்கிகள் இவர்களுக்கு புதிதாக கடன் கொடுக்க தயங்குகின்றன. அதிக இடர்மிக்க கடன்களை வங்கிகள் தவிர்த்து வருவதால், கடன் தவணையை செலுத்த முடியாதவர்கள் என கருதப்படும் நபர்களிடம், எச்சரிக்கையான அணுகுமுறையை கடைப்பிடிக்கின்றன. ஏற்கனவே கடன் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், அதை மறுபரிசீலனை செய்கின்றன.



குறுகிய கால பாதிப்பு

வங்கிகளின் எச்சரிக்கையான அணுகுமுறை ஒரு பக்கம் இருக்க, கடன் தவணை தள்ளிவைப்பு சலுகையை நாடியவர்கள் எல்லாருமே சிக்கலில் இருப்பவர்கள் என கருதிவிட முடியாது. நிதி நெருக்கடி இல்லாத நிலையிலும் கூட, பலரும் இயல்பான வசதியாக இதை நாடியிருக்கலாம். மேலும் சிலர், தற்போதைய நெருக்கடி எவ்வளவு காலம் நீடிக்கும் என நிச்சயமாக தெரியாததால், இவ்வாறு தீர்மானித்திருக்கலாம். ஒரு சிலர், தேவையில்லாத நிலையிலும், தெரியாமல் இந்த வசதியை நாடியிருக்கலாம்.


எனவே, தவணை தள்ளிவைப்பை நாடுவதாலேயே ஒருவர் சிக்கலில் இருப்பதாக கருதி, கடன் வாய்ப்பு மறுக்கப்படுவது சரியா என கேள்வி எழலாம்.எனினும், இந்த தயக்கமும், கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதும் தற்காலிகமாகவே இருக்கும் என வல்லுனர்கள் கூறுகின்றனர். எப்படியும், வங்கிகள் கடன் பெற்றவரின் ஆற்றலை பரிசீலித்து, அதற்கேற்ப முடிவு செய்யும் என்று கருதப்படுகிறது.


தவணை சலுகையை நாடியதால், புதிய கடன் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டால், கடன்தாரர் வங்கியை அணுகி தங்கள் நிலையை விளக்கலாம். நிதி நிலை திருப்திகரமாக இருந்தால், கடன் கோரிக்கை ஏற்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும், பொருளாதார நிச்சயமற்ற சூழலில், தேவையில்லாமல் புதிய கடனை நாடுவதை தவிர்ப்பதே நல்லது என, கருதப்படுகிறது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)