பதிவு செய்த நாள்
10 ஜூன்2020
00:20
திருப்பூர்:பி.பி.இ., பாதுகாப்பு கவச உடைகள் ஏற்றுமதியை அதிகரிக்க, சர்வதேச தரச் சான்றளிப்பு நடைமுறைகளில், மத்திய ஜவுளித் துறை கவனம் செலுத்த துவங்கியுள்ளது.தமிழகத்தில், திருப்பூர், கோவை, சென்னை ஆகிய பகுதிகளில், பி.பி.இ.,க்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தரக் கட்டுப்பாட்டுக்கென குறிப்பிட்ட ஆய்வ கங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டுமெனில், ஒவ்வொரு நாடும், அதன் சுகாதார மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கேற்ப, பி.பி.இ.,க்கான தரச் சான்றிதழ்களை பெற வலியுறுத்துகின்றன.
ஜவுளித் துறை அதிகாரிகள் இது குறித்து கூறியதாவது:ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஒரு தரச் சான்றிதழும், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய அங்குள்ள மருந்து நிர்வாகத் துறையின் சான்றிதழும் பெற வேண்டியுள்ளது.
நம் நாட்டில் தயாராகும், பி.பி.இ., மாதிரியை, ஏற்றுமதி செய்யப்பட உள்ள நாட்டுக்கே அனுப்பி, அங்கிருந்து தரச் சான்றிதழ் பெற வேண்டும் அல்லது நம் நாட்டில் இதற்கான அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களில் தரச் சான்றிதழ் பெற வேண்டும். ஏற்றுமதியை அதிகரிக்க, மத்திய அரசு புதிய வியூகங்களை வகுத்து வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர் சக்திவேல் கூறுகையில், ''ஐரோப்பா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில், பி.பி.இ., தேவை அதிகரித்துள்ளது. பி.பி.இ.,க்கான சர்வதேச தரச் சான்றளிப்பு தொடர்பாக, மத்திய அரசின் உதவியை நாடியிருக்கிறோம்,'' என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|