பதிவு செய்த நாள்
10 ஜூன்2020
23:44
மும்பை:இந்தியாவில் அதிகரித்திருக்கும் சீன எதிர்ப்பு மனநிலை காரணமாக, இந்த கொரோனா காலத்திலும், தங்களுடைய, ‘டிவி’ அதிகமாக விற்பனை ஆகியிருப்பதாக, ‘வியு டிவி’ தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.
இந்நிறுவனம், கடந்த மே மாதத்தில் மட்டும், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, ‘4கே’ தரத்திலான ‘டிவி’களை விற்பனை செய்துள்ளது. இது சாம்சங், எல்.ஜி., சோனி மற்றும் ‘மி’ ஆகிய நிறுவன தயாரிப்புகளின் விற்பனையை விட அதிகம் என தெரிவித்துள்ளது.
வியு டெலிவிஷன் நிறுவனம், கடந்த, 2006ம் ஆண்டு மும்பையை தலைமையிடமாக கொண்டு, கலிபோர்னியாவில் துவக்கப்பட்ட நிறுவனமாகும்.விற்பனை குறித்து, ‘வியு’ நிறுவனத்தின் தலைமை நிர்வாகி தேவிதா சராப் கூறியதாவது:கொரோனா தொற்று இருந்த நிலையிலும், ‘வியு டிவி’ அதிகளவில் விற்பனை ஆகியுள்ளது.
கடந்த மே மாதத்தில், இந்தியாவில் மிகவும் அதிகம் விற்பனை செய்யப்பட்ட பிராண்டாக, ‘வியு’ மாறி உள்ளது.முக்கியமான இரண்டு காரணங்களால் எங்கள் விற்பனை அதிகரித்து உள்ளது. ஒன்று, அதிகரித்திருக்கும் சீன பொருட்களுக்கு எதிரான மக்களின் மனநிலை. அதன் காரணமாக, மக்கள் எங்கள், ‘டிவி’க்கு அதிக ஆதரவளித்துள்ளனர்.
வழக்கமாக, ஒரு நாளில், 200 ‘டிவி’ விற்பனை ஆகி வந்த நிலையில், பிளிப்கார்ட்டில், ஒரு நாளைக்கு, 2,000 ‘டிவி’ என்ற உச்சத்தை தொட்டது.இரண்டாவது, எங்கள் சேவை குறித்த அறிவிப்பு. வாங்கும், ‘டிவி’யில் ஏதாவது பழுது இருந்தால், அதை நீக்குவதை தவிர்த்து விட்டு, புதிய ‘டிவி’யை வழங்குவதாக அறிவித்தோம்.
வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் பழுது நீக்க சென்று கொண்டிருக்க முடியாது என்பதால், புதிதாக ஒன்றை மாற்றி தருவதாக அறிவித்தோம். இதுவும் நுகர்வோரை வெகுவாக ஈர்த்துள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|