பதிவு செய்த நாள்
16 ஜூன்2020
10:34
புதுடில்லி: நாட்டில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், வீட்டு உபயோக சாதனங்கள், தகவல் தொழில்நுட்ப துறை சார்ந்த தயாரிப்புகள் ஆகியவற்றின் விற்பனை, நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக, அத்துறைகளைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, இத்துறையினர் கூறியிருப்பதாவது:ரித்திஷ் கோசல், தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி, இன்பினிட்டி ரீடெய்ல்: ஏப்ரல், மே மாதங்களில் விற்பனையை முற்றாக நாங்கள் இழந்தோம். ஆனால் இப்போது, கடந்த ஆண்டு, இதே மாதத்துடன் ஒப்பிடும்போது, 45 சதவீத விற்பனை வளர்ச்சியை கண்டுஉள்ளோம். மேலும், வீட்டிலிருந்து அலுவலகப் பணிகளை மேற்கொள்வது அதிகரித்திருப்பதால், லேப்டாப், காணொலிக்கான கேமரா, ரூட்டர்கள், போன் ஆகியவற்றின் விற்பனையும் அதிகரித்து வருகிறது.வீட்டில் அதிக நேரம் இருக்கும் வாய்ப்பு இருப்பதால், இல்ல பராமரிப்பிலும் கவனம் செலுத்துகின்றனர். இதனால், ‘வாக்குவம் கிளீனர்’ உள்ளிட்ட சாதனங்கள் விற்பனை அதிகரித்து வருகிறது.இவை, தேவைகள் அதிகரித்திருப்பதையே காட்டுகிறது. இது, தயாரிப்பாளார்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரோஹித் மாத்துார், தலைவர், உஷா இண்டர்நேஷனல்: நிலைமைகள் தற்போது சீரடைந்து வருகிறது. தேவைகளும் அதிகரித்து வருகிறது. இன்னும், இரண்டு அல்லது மூன்று மாதங்களில் இயல்பான விற்பனை நிலை திரும்பிவிடும் என, எதிர்பார்க்கிறோம்.
மணீஷ் சர்மா, தலைமை செயல் அதிகாரி, பானாசோனிக் இந்தியா: சிகை சீர்படுத்தும் சாதனங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. மேலும், ‘ஏசி, வாஷிங் மெஷின், ரெப்ரிஜிரேட்டர்’ போன்ற சாதனங்களின் விற்பனையும் அதிகரித்து வருவதை காண்கிறோம்.சில்லரை விற்பனையாளர்கள், நாட்டில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின், தேவைகள் அதிகரித்திருப்பதாகவும், விற்பனையும் அதிகரித்து வருவதாகவும் எங்களிடம் தெரிவிக்கின்றனர்.இவ்வாறு தெரிவித்துஉள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|