முதலில் சட்டி நிரம்பட்டும்! முதலில் சட்டி நிரம்பட்டும்! ...  வணிக வரி வருவாய்  ரூ.95,000 கோடி வணிக வரி வருவாய் ரூ.95,000 கோடி ...
சூடு பிடிக்கும் விற்பனை தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2020
10:34

புதுடில்லி: நாட்டில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், வீட்டு உபயோக சாதனங்கள், தகவல் தொழில்நுட்ப துறை சார்ந்த தயாரிப்புகள் ஆகியவற்றின் விற்பனை, நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக, அத்துறைகளைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.


இது குறித்து, இத்துறையினர் கூறியிருப்பதாவது:ரித்திஷ் கோசல், தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி, இன்பினிட்டி ரீடெய்ல்: ஏப்ரல், மே மாதங்களில் விற்பனையை முற்றாக நாங்கள் இழந்தோம். ஆனால் இப்போது, கடந்த ஆண்டு, இதே மாதத்துடன் ஒப்பிடும்போது, 45 சதவீத விற்பனை வளர்ச்சியை கண்டுஉள்ளோம். மேலும், வீட்டிலிருந்து அலுவலகப் பணிகளை மேற்கொள்வது அதிகரித்திருப்பதால், லேப்டாப், காணொலிக்கான கேமரா, ரூட்டர்கள், போன் ஆகியவற்றின் விற்பனையும் அதிகரித்து வருகிறது.வீட்டில் அதிக நேரம் இருக்கும் வாய்ப்பு இருப்பதால், இல்ல பராமரிப்பிலும் கவனம் செலுத்துகின்றனர். இதனால், ‘வாக்குவம் கிளீனர்’ உள்ளிட்ட சாதனங்கள் விற்பனை அதிகரித்து வருகிறது.இவை, தேவைகள் அதிகரித்திருப்பதையே காட்டுகிறது. இது, தயாரிப்பாளார்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரோஹித் மாத்துார், தலைவர், உஷா இண்டர்நேஷனல்: நிலைமைகள் தற்போது சீரடைந்து வருகிறது. தேவைகளும் அதிகரித்து வருகிறது. இன்னும், இரண்டு அல்லது மூன்று மாதங்களில் இயல்பான விற்பனை நிலை திரும்பிவிடும் என, எதிர்பார்க்கிறோம்.

மணீஷ் சர்மா, தலைமை செயல் அதிகாரி, பானாசோனிக் இந்தியா: சிகை சீர்படுத்தும் சாதனங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. மேலும், ‘ஏசி, வாஷிங் மெஷின், ரெப்ரிஜிரேட்டர்’ போன்ற சாதனங்களின் விற்பனையும் அதிகரித்து வருவதை காண்கிறோம்.சில்லரை விற்பனையாளர்கள், நாட்டில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின், தேவைகள் அதிகரித்திருப்பதாகவும், விற்பனையும் அதிகரித்து வருவதாகவும் எங்களிடம் தெரிவிக்கின்றனர்.இவ்வாறு தெரிவித்துஉள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)