ஜியோவில் குவியும் முதலீடுகள் ஜியோவில் குவியும் முதலீடுகள் ...  எல்.ஐ.சி., பங்கு வெளியீடு நிதியமைச்சகம் தீவிரம் எல்.ஐ.சி., பங்கு வெளியீடு நிதியமைச்சகம் தீவிரம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
செலவைக் குறையுங்கள்: வங்கிகளுக்கு அரசு கட்டளை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2020
23:03

புதுடில்லி:பொதுத்துறை வங்கிகள் தங்கள் செலவுகளைக் குறைத்துக்கொள்ளுமாறு, மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

நிர்வாகிகள், மேலதிகாரிகளுக்கு புதிய கார்கள் வாங்குவது, விருந்தினர் இல்லத்தை புதிப்பிப்பது போன்றவற்றுக்கு செய்யும் செலவுகளை தவிர்த்து, வருமானத்தை அதிகரிக்கும் முயற்சிகளில் இறங்குமாறு, பொதுத்துறை வங்கிகளை, மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.இது குறித்து, விரிவான அறிவுறுத்தலை, மத்திய அரசின், நிதி சேவைகள் துறை, அனைத்து பொதுத்துறை வங்கி தலைவர்களுக்கும் அனுப்பி உள்ளது.

அரசின் இந்த அறிவுறுத்தலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது, பஞ்சாப் நேஷனல் வங்கி செய்த ஒரு காரியம் தான்.அண்மையில், பஞ்சாப் நேஷனல் வங்கி, அதன் உயர் நிர்வாகிகளுக்கு, விலை உயர்ந்த, மூன்று புதிய, ‘ஆடி’ கார்களை வாங்கியது.கொரோனா தாக்கத்தால் நாடே பாதிக்கப்பட்டு, தொழில்கள் எல்லாம், நிதி ஆதாரங்கள் இன்றி தவித்துக்கொண்டிருந்த நிலையில், பொதுத்துறை வங்கியான, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஆடம்பர கார்களை வாங்கியது விமர்சனத்துக்கு உள்ளானது.

நாடே முடக்கப்பட்டிருந்த சமயத்தில், கிட்டத்தட்ட, 1.30 கோடி ரூபாய் செலவில், ஆடம்பர கார்களை வங்கி வாங்கியது, அனைவரது புருவத்தையும் உயர்த்த வைத்தது. இந்நிலையில் தான், மத்திய அரசு, அனாவசிய ஆடம்பர செலவுகளை குறைக்கும்படி, அனைத்து பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)