பதிவு செய்த நாள்
25 ஜூன்2020
22:03
புதுடில்லி:உலகளவில் உள்ள முதலீட்டாளர்களில், அதிகம் பேர், இந்திய நிதி சேவைகள் துறையில் மிகவும் நம்பிக்கை வைத்திருப்பது, கணக்கெடுப்பு ஒன்றின் மூலம் தெரிய வந்துஉள்ளது. அதுமட்டுமின்றி; கணக்கெடுப்பில் இருந்த, 15 நாட்டு சந்தைகளில், முதலீட்டாளர்களின் அதிக நம்பிக்கையை பெற்ற சந்தையில், முதலிடத்தை இந்தியா பெற்றுள்ளது. ‘சி.எப்.ஏ., இன்ஸ்டிடியூட்’ அண்மையில், 3,525 சில்லரை முதலீட்டாளர்களிடமும்,
921 முதலீட்டு நிறுவனங்களிடமும் ஒரு கணக்கெடுப்பை மேற்கொண்டது.
இதில், 87 சதவீத இந்திய முதலீட்டாளர்கள், உள்நாட்டு நிதி சந்தைகள் மீது நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். கடந்த, 2018ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் போது,
71 சதவீதமாக இருந்தது, தற்போது, 87 சதவீதமாக அதிகரித்துள்ளது.உலக அளவில், 47 சதவீத முதலீட்டாளர்களும், ஆசிய பசிபிக் பகுதியை சேர்ந்த முதலீட்டாளர்களில், 49 சதவீதம் பேரும், இந்திய நிதி சந்தைகள் துறை மீது நம்பிக்கை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, மெயின்லாண்டு சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா,
ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட, 15 சந்தைகள் குறித்த ஆய்வு, இந்த கணக்கெடுப்பில் மேற்கொள்ளப்பட்டது.இந்த, 15 சந்தைகளில், முதலீட்டாளர்களிடம் அதிகம் நம்பிக்கை பெற்ற சந்தை என்ற இடத்தை, இந்தியா பிடித்துள்ளது.ஆஸ்திரேலியா சந்தை கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.24 சதவீதமுதலீட்டாளர்கள் மட்டுமே, ஆஸ்திரேலிய சந்தை மீது நம்பிக்கை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|