பதிவு செய்த நாள்
08 ஜூலை2020
23:22
மும்பை:கடந்த ஜூன் மாதத்தில், வேலைவாய்ப்பு நடவடிக்கைகள் ஓரளவு அதிகரித்து உள்ளதாக, அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக, நாடு முடக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில், பணியமர்த்தும் நடவடிக்கைகள் குறிப்பிட்ட அளவுக்கு குறைந்து வந்த போதும் கூட, ஜூன் மாதத்தில், அதற்கு முந்தைய மாதத்தை விட அதிகரித்துள்ளது.
தளர்வுகள்
இது குறித்து, ‘நவ்க்ரி டாட் காம்’ நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஜூன் மாதத்துக்கான, ‘நவ்க்ரி ஜாப்ஸ்பீக்’ குறியீடு, 1,208 ஆக உள்ளது. கடந்த மே மாதத்துடன் ஒப்பிடும்போது இது, 33 சதவீதம் அதிகமாகும். கடந்த மே மாதத்தில் இது, 910 ஆக இருந்தது.கொரோனா பரவல் காரணமாக, நாடு முடக்கப்பட்டதை அடுத்து, விருந்தோம்பல், சில்லறை விற்பனை, வாகன துறை ஆகிய துறைகளில், ஆட்களை பணிக்கு அமர்த்துவது மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது தளர்வுகள் படிப்படியாக அதிகரிக்கப்படுவதை அடுத்து, இந்த துறைகளில் பணியமர்த்தல் அதிகரித்து வருகிறது. ஜூன் மாதத்தில், அதற்கு முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது, விருந்தோம்பல் துறையில் பணியமர்த்தல், 107 சதவீதமும்; வாகன துறையில், 77 சதவீதமும் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
முன்னேற்றம்
இருப்பினும், கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது, தற்போதைய குறியீடு, 44 சதவீத சரிவாகும்.கடந்த இரு மாதங்களுடன் ஒப்பிடும்போது, ஜூன் மாதத்தில் தகவல் தொழில்நுட்பம், நுகர்பொருள் துறை ஆகியவற்றில் சிறிது முன்னேற்றம் தெரிய வந்து உள்ளது.வரும் மாதங்களில், மேலும் முன்னேற்றம் இருக்கும் என கருதப்படுகிறது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|