பதிவு செய்த நாள்
08 ஜூலை2020
23:25
புதுடில்லி:‘ரோசாரி பயோடெக்’ நிறுவனத்தின், புதிய பங்கு வெளியீடு, அடுத்த வாரத்தில் இருக்கலாம் என, சந்தை வட்டாரங்களில் கூறப்பட்டு வந்த நிலையில், பங்கு வெளியீட்டுக்கான தேதியை இந்நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.
ரோசாரி பயோடெக் நிறுவனம், ஜூலை, 13ம் தேதி, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதாக அறிவித்துள்ளது. மேலும், ஒரு பங்கின் விலை, 423 – 425 ரூபாயாக இருக்கும் என்றும் தெரிவிக்க பட்டு உள்ளது. இந்த பங்கு வெளியீட்டின் போது, நிறுவனர்களின், 1.05 கோடி பங்குகள் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.மேலும், 50 கோடி ரூபாய்க்கு, புதிய பங்குகளும் விற்பனை செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புக்கு முன், 150 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகள் வெளியிடப்படும் என பரவலாக பேசப்பட்டு வந்தது.ஏற்கனவே, தனிப்பட்ட பங்கு ஒதுக்கீட்டின் மூலம், 100 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது. 23.53 லட்சம் பங்குகளை, மலபார் இந்தியா பண்டு நிறுவனம், ஆக்சிஸ் மியூச்சுவல் பண்டு நிறுவனம், சுந்தரம் மியூச்சுவல் பண்டு நிறுவனம், ஐ.சி.ஐ.சி.ஐ., லொம்பார்டு ஆகிய நிறுவனங்களுக்கு விற்பனை செய்து நிதி திரட்டப்பட்டுள்ளது.
இந்த பங்கு வெளியீட்டின் மூலம், 496 கோடி ரூபாய் திரட்டப்பட இருக்கிறது.கடந்த நான்கு மாதங்களாக, எந்த ஒரு புதிய பங்கு வெளியீடும் மேற்கொள்ளப்படாத நிலையில், சிறப்பு ரசாயனங்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள, ரோசாரி பயோடெக், தைரியமாக முதல் அடியை எடுத்து வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மார்ச், 5ம் தேதியன்று, ‘எஸ்.பி.ஐ., கார்ட்ஸ் அண்டு பேமென்ட் சர்வீசஸ்’ நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வந்தது. அதன் பிறகு, வேறு எந்த நிறுவனமும் வரவில்லை.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|