பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் 20.15 லட்சமாக அதிகரிப்பு பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் 20.15 லட்சமாக அதிகரிப்பு ... உச்சம் தொட்டது தங்கம் விலை; சவரன் ரூ.38 ஆயிரத்தை தாண்டியது உச்சம் தொட்டது தங்கம் விலை; சவரன் ரூ.38 ஆயிரத்தை தாண்டியது ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச் சந்தையை நோக்கி படையெடுப்பு லாபத்தை தேடும் சில்லரை முதலீட்டாளர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2020
00:58

புதுடில்லி:பங்குச் சந்தையில் சில்லரை முதலீட்டாளர்களின் பங்கேற்பு, கொரோனா தொற்று நோய் பரவலுக்கு பின் அதிகரித்து வருவதாக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, 'செபி’யின் தலைவர் அஜய் தியாகி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது:கொரோனா பரவல் துவங்கியதற்கு பின், பங்குச் சந்தைகளில் சில்லரை முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்கேற்க துவங்கி இருக்கின்றனர். கடந்த சில மாதங்களில், இவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.அரசு பத்திரங்கள்புதிய முதலீட்டாளர்கள் வரவு அதிகரித்திருப்பதை அடுத்து, டிமேட் கணக்குகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

புதிய முதலீட்டாளர்கள், முதலில் அதிக ரிஸ்க் இல்லாத அரசு பத்திரங்களில் முதலீடு செய்து, அதன்பின், பங்குச் சந்தை உள்ளிட்ட மூலதன சந்தைகளில் முதலீடு செய்ய முனைவது நல்லது.பங்குச் சந்தைகள், கடந்த மார்ச் மாத அதிர்ச்சியிலிருந்து பெருமளவிற்கு மீண்டுவிட்டது. தொற்றுநோய் பரவல் இருந்தபோதிலும், சந்தை, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் மூலதனத்தை திரட்டி உள்ளது.

நிறுவனங்களைப் பொறுத்தவரை, இதற்கு முன் சந்தித்திராத சவால்களை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. கொரோனா தாக்கம் பல நிறுவனங்களை மிகுந்த மன அழுத்தத்திற்கு தள்ளி உள்ளது. ஏற்கனவே அழுத்தங்களில் இருந்த நிறுவனங்களுக்கு, கொரோனா பாதிப்புகள், நிலைமையை மேலும் மோசமாக்கி உள்ளது. இத்தகைய நிறுவனங்களுக்கு, சந்தையிலிருந்து நிதி திரட்டுவது கடினமான காரியமாகி விட்டது.

விதிகளில் தளர்வு

இத்தகைய அழுத்தங்களுக்கு உள்ளாகி இருக்கும் நிறுவனங்கள், நிதி திரட்டுவதற்கு, பலவற்றில் விதிகள் எளிமையாக்கப்பட்டுள்ளன.உதாரணமாக, உரிமை பங்குகள் வெளியீடு, தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு பங்குகளை வழங்குவது, முன்னுரிமை பங்குகள் வழங்கல், எளிதான விலை நிர்ணயம் போன்றவற்றில் விதிகள் தளர்த்தப்பட்டு, எளிமையாக்கப்பட்டுள்ளன.ஏற்கனவே, பல நிறுவனங்கள் இந்த தளர்வுகளை பயன்படுத்தி, தங்களின் தேவைகளுக்கான நிதியை திரட்டும் முயற்சியில் இறங்கி இருக்கின்றன.

நாம் மிகவும் கடினமான, நிச்சயமற்ற காலகட்டத்தை கடந்து வந்துகொண்டிருக்கிறோம். இருப்பினும், சவால்களுடன், வாய்ப்புகளும் சேர்ந்தே வருகின்றன. நிறுவனங்கள் நிதி திரட்டுவது அதிகரித்துள்ளது, பங்குச் சந்தையின் மீட்சி ஆகியவை ஊக்கமளிப்பதாகவே இருக்கின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.

ஈர்க்கும் ஏற்றம்

மற்ற முதலீட்டுகளுக்கான வாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில், பங்குச் சந்தையின் ஏற்றம், புதிய முதலீட்டாளர்களை கவரும் வகையில் இருப்பதால், அவர்களின் பங்கேற்பு அதிகரிக்கிறது என, சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 25 லட்சம் பேர்நடப்பு ஆண்டில், ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலகட்டத்தில், 25 லட்சம் புதிய முதலீட்டாளர்கள், பல பங்குத் தரகு நிறுவனங்களில், கணக்குகள் துவக்கியுள்ளனர். முக்கியமான முதல், 12 பங்குத் தரகு நிறுவனங்களில் மட்டும், முதல் காலாண்டில், 13 லட்சம் புதிய முதலீட்டாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)