பதிவு செய்த நாள்
23 ஜூலை2020
00:58
புதுடில்லி:பங்குச் சந்தையில் சில்லரை முதலீட்டாளர்களின் பங்கேற்பு, கொரோனா தொற்று நோய் பரவலுக்கு பின் அதிகரித்து வருவதாக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, 'செபி’யின் தலைவர் அஜய் தியாகி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது:கொரோனா பரவல் துவங்கியதற்கு பின், பங்குச் சந்தைகளில் சில்லரை முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்கேற்க துவங்கி இருக்கின்றனர். கடந்த சில மாதங்களில், இவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.அரசு பத்திரங்கள்புதிய முதலீட்டாளர்கள் வரவு அதிகரித்திருப்பதை அடுத்து, டிமேட் கணக்குகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.
புதிய முதலீட்டாளர்கள், முதலில் அதிக ரிஸ்க் இல்லாத அரசு பத்திரங்களில் முதலீடு செய்து, அதன்பின், பங்குச் சந்தை உள்ளிட்ட மூலதன சந்தைகளில் முதலீடு செய்ய முனைவது நல்லது.பங்குச் சந்தைகள், கடந்த மார்ச் மாத அதிர்ச்சியிலிருந்து பெருமளவிற்கு மீண்டுவிட்டது. தொற்றுநோய் பரவல் இருந்தபோதிலும், சந்தை, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் மூலதனத்தை திரட்டி உள்ளது.
நிறுவனங்களைப் பொறுத்தவரை, இதற்கு முன் சந்தித்திராத சவால்களை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. கொரோனா தாக்கம் பல நிறுவனங்களை மிகுந்த மன அழுத்தத்திற்கு தள்ளி உள்ளது. ஏற்கனவே அழுத்தங்களில் இருந்த நிறுவனங்களுக்கு, கொரோனா பாதிப்புகள், நிலைமையை மேலும் மோசமாக்கி உள்ளது. இத்தகைய நிறுவனங்களுக்கு, சந்தையிலிருந்து நிதி திரட்டுவது கடினமான காரியமாகி விட்டது.
விதிகளில் தளர்வு
இத்தகைய அழுத்தங்களுக்கு உள்ளாகி இருக்கும் நிறுவனங்கள், நிதி திரட்டுவதற்கு, பலவற்றில் விதிகள் எளிமையாக்கப்பட்டுள்ளன.உதாரணமாக, உரிமை பங்குகள் வெளியீடு, தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு பங்குகளை வழங்குவது, முன்னுரிமை பங்குகள் வழங்கல், எளிதான விலை நிர்ணயம் போன்றவற்றில் விதிகள் தளர்த்தப்பட்டு, எளிமையாக்கப்பட்டுள்ளன.ஏற்கனவே, பல நிறுவனங்கள் இந்த தளர்வுகளை பயன்படுத்தி, தங்களின் தேவைகளுக்கான நிதியை திரட்டும் முயற்சியில் இறங்கி இருக்கின்றன.
நாம் மிகவும் கடினமான, நிச்சயமற்ற காலகட்டத்தை கடந்து வந்துகொண்டிருக்கிறோம். இருப்பினும், சவால்களுடன், வாய்ப்புகளும் சேர்ந்தே வருகின்றன. நிறுவனங்கள் நிதி திரட்டுவது அதிகரித்துள்ளது, பங்குச் சந்தையின் மீட்சி ஆகியவை ஊக்கமளிப்பதாகவே இருக்கின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.
ஈர்க்கும் ஏற்றம்
மற்ற முதலீட்டுகளுக்கான வாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில், பங்குச் சந்தையின் ஏற்றம், புதிய முதலீட்டாளர்களை கவரும் வகையில் இருப்பதால், அவர்களின் பங்கேற்பு அதிகரிக்கிறது என, சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 25 லட்சம் பேர்நடப்பு ஆண்டில், ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலகட்டத்தில், 25 லட்சம் புதிய முதலீட்டாளர்கள், பல பங்குத் தரகு நிறுவனங்களில், கணக்குகள் துவக்கியுள்ளனர். முக்கியமான முதல், 12 பங்குத் தரகு நிறுவனங்களில் மட்டும், முதல் காலாண்டில், 13 லட்சம் புதிய முதலீட்டாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|