பதிவு செய்த நாள்
23 ஜூலை2020
22:58
புதுடில்லி:'வால்மார்ட் இந்தியா' நிறுவனத்தை வாங்கி இருப்பதாகவும், விரைவில், 'பிளிப்கார்ட் ஹோல்சேல்' எனும் வணிகத்தை துவக்க இருப்பதாகவும், 'பிளிப்கார்ட்' தெரிவித்து உள்ளது. இருப்பினும், வால்மார்ட் இந்தியாவை எவ்வளவு தொகை கொடுத்து கையகப்படுத்தி உள்ளது என்பது குறித்த தகவலை, பிளிப்கார்ட் தெரிவிக்கவில்லை.
வால்மார்ட் இந்தியா நிறுவனம், நாட்டில், 28 மொத்த விலை ஸ்டோர்களை நடத்தி வருகிறது.அண்மையில் பிளிப்கார்ட், 9,060 கோடி ரூபாய் நிதியை, வால்மார்ட் தலைமையிலான முதலீட்டு குழுமத்திடமிருந்து திரட்டி உள்ளதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்போது, வால்மார்ட் இந்தியாவை கையகப்படுத்தி இருக்கிறது.
கடந்த, 2018ல், வால்மார்ட் நிறுவனம், பிளிப்கார்டில், 1.21 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்து, 77 சதவீத பங்குகளை கைப்பற்றியது.பிளிப்கார்ட் ஹோல்சேல் என்பது, மொத்த விற்பனை பிரிவில் ஒரு புதிய, 'டிஜிட்டல்' சந்தையாகும். இது, 'பி 2 பி' எனப்படும், 'வணிகத்திலிருந்து வணிகத்திற்கு' எனும் பிரிவை மையமாக கொண்டு செயல்படுவதாகும்.
இந்த சந்தை, ஒரு முனையில் இருக்கும் விற்பனையாளர்களையும், உற்பத்தியாளர்களை யும், மறுமுனையில் இருக்கும் ஸ்டோர்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களையும் இணைக்கும் வகையில் செயல்பட இருப்பதாக, பிளிப்கார்ட் நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் ஆதர்ஷ் மேனன் தெரிவித்துள்ளார்.பிளிப்கார்ட் ஹோல்சேல் வணிக பிரிவு, ஆகஸ்ட் மாதத்திலிருந்து துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுஉள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|