கட்டுமான இயந்திரங்கள்  விற்பனை 70 சதவீதம் சரிவு கட்டுமான இயந்திரங்கள் விற்பனை 70 சதவீதம் சரிவு ... உடல்.. பொருள்... உயில்...! உடல்.. பொருள்... உயில்...! ...
சர்வதேச எரிசக்தி நிறுவனங்களில் ரிலையன்ஸ் 2வது இடத்தை பிடித்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2020
23:12

புதுடில்லி:உலகளாவிய எரிசக்தி நிறுவனங்களின் சந்தை மதிப்பில், முகேஷ் அம்பானியின், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.


சவுதி அரேபியாவின், சவுதி அராம்கோ நிறுவனம், தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் இருந்த, அமெரிக்காவின், எக்ஸான் மொபில் நிறுவனம், மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. கடந்த, 24ம் தேதி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை அடிப்படையிலான சந்தை மதிப்பு, முதன் முறையாக, 14 லட்சம் கோடி ரூபாயை தாண்டியது. அதேசமயம், எக்ஸான் சந்தை மதிப்பு, 7,500 கோடி ரூபாய் குறைந்தது.

இதையடுத்து, ரிலையன்ஸ், சந்தை மதிப்பில், இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சவுதி அராம்கோவின் சந்தை மதிப்பு, 131 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. உலகளவில், கொரோனா பாதிப்பால், எரிபொருள் தேவை குறைந்துள்ளது. இதன் காரணமாக, எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களின் சந்தை மதிப்பு வீழ்ச்சி கண்டுள்ளது. இந்தாண்டு, எக்ஸான் மொபில் நிறுவன பங்கு விலை, 39 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால், ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை, 46 சதவீதம் உயர்ந்துள்ளது.இது, முகேஷ் அம்பானி, எண்ணெய் சுத்திகரிப்பு வர்த்தகத்தை மட்டும் நம்பியிராமல், மின்னணு மற்றும் சில்லரை விற்பனை துறைகளிலும் வலுவாக காலுன்ற எடுத்த நடவடிக்கைகளால் சாத்தியமாகிஉள்ளது.

அவர், ஜியோ பிளாட்பார்ம் நிறுவனம் மூலம், ‘பேஸ்புக், கூகுள்’ உள்ளிட்ட நிறுவனங்கள் வாயிலாக, 1.50 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்தார்.இதன் காரணமாக, ரிலையன்ஸ் நிறுவன பங்கு விலை உயர்ந்து, முகேஷ் அம்பானியின், சொத்து மதிப்பு, 1.67 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, உலக பெருங்கோடீஸ்வரர்கள் வரிசையில், முகேஷ் அம்பானி, ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)