பதிவு செய்த நாள்
27 ஜூலை2020
23:12
புதுடில்லி:உலகளாவிய எரிசக்தி நிறுவனங்களின் சந்தை மதிப்பில், முகேஷ் அம்பானியின், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
சவுதி அரேபியாவின், சவுதி அராம்கோ நிறுவனம், தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் இருந்த, அமெரிக்காவின், எக்ஸான் மொபில் நிறுவனம், மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. கடந்த, 24ம் தேதி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை அடிப்படையிலான சந்தை மதிப்பு, முதன் முறையாக, 14 லட்சம் கோடி ரூபாயை தாண்டியது. அதேசமயம், எக்ஸான் சந்தை மதிப்பு, 7,500 கோடி ரூபாய் குறைந்தது.
இதையடுத்து, ரிலையன்ஸ், சந்தை மதிப்பில், இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சவுதி அராம்கோவின் சந்தை மதிப்பு, 131 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. உலகளவில், கொரோனா பாதிப்பால், எரிபொருள் தேவை குறைந்துள்ளது. இதன் காரணமாக, எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களின் சந்தை மதிப்பு வீழ்ச்சி கண்டுள்ளது. இந்தாண்டு, எக்ஸான் மொபில் நிறுவன பங்கு விலை, 39 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால், ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை, 46 சதவீதம் உயர்ந்துள்ளது.இது, முகேஷ் அம்பானி, எண்ணெய் சுத்திகரிப்பு வர்த்தகத்தை மட்டும் நம்பியிராமல், மின்னணு மற்றும் சில்லரை விற்பனை துறைகளிலும் வலுவாக காலுன்ற எடுத்த நடவடிக்கைகளால் சாத்தியமாகிஉள்ளது.
அவர், ஜியோ பிளாட்பார்ம் நிறுவனம் மூலம், ‘பேஸ்புக், கூகுள்’ உள்ளிட்ட நிறுவனங்கள் வாயிலாக, 1.50 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்தார்.இதன் காரணமாக, ரிலையன்ஸ் நிறுவன பங்கு விலை உயர்ந்து, முகேஷ் அம்பானியின், சொத்து மதிப்பு, 1.67 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, உலக பெருங்கோடீஸ்வரர்கள் வரிசையில், முகேஷ் அம்பானி, ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|