பதிவு செய்த நாள்
27 ஜூலை2020
23:03
மும்பை:ஊரடங்கால், நடப்பு நிதியாண்டின், முதல் காலாண்டில், கட்டுமான பணிகள் முடங்கியதை அடுத்து, அத்துறைக்கான இயந்திரங்கள் விற்பனை, 70 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.
இது குறித்து, ‘கிரிசில் ரீசர்ச்’ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:நடப்பு, 2020 -– 21ம் நிதியாண்டின், ஏப்., – ஜூன் வரையிலான முதல் காலாண்டில், ஊரடங்கு காரணமாக, கட்டுமான பணிகள் நின்று விட்டன. இதனால், மண் அள்ளும் இயந்திரங்கள், லோடர்கள், கிரேன்கள் உள்ளிட்ட கட்டுமான இயந்திரங்கள் விற்பனை, 70 சதவீதம் குறைந்துள்ளது.
கடந்த நிதியாண்டில், இந்த சரிவு, 20 சதவீத அளவிற்கே இருந்தது.ஊரடங்கு சற்று தளர்த்தப் பட்டு உள்ளதால், நடப்பு ஜூலை முதல் செப்., வரையிலான இரண்டாவது காலாண்டில், கட்டுமான இயந்திரங்கள் துறையின் விற்பனை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், கொரோனா காரணமாக, மக்களின் சுகாதாரச் செலவுகள் அதிகரித்துள்ளதால், அடிப்படை கட்டமைப்பு துறையில் முதலீடுகள் குறைவாகவே இருக்கும்.அதற்கேற்பவே, கட்டுமான இயந்திரங்களின் தேவையும் இருக்கும் என, தெரிகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|