பதிவு செய்த நாள்
28 ஜூலை2020
23:32
புதுடில்லி:‘‘தொலைதொடர்பு துறை, இன்னும் சிக்கல்களிலிருந்து வெளிவரவில்லை; அது சிறப்பாக செயல்படுவதற்கு, அரசாங்கத்தின் ஆதரவு அவசியம்,’’ என, பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் தெரிவித்துள்ளார்.
கடந்த நிதியாண்டுக்கான ஆண்டறிக்கையை வெளியிட்டு, அவர் மேலும் தெரிவித்து உள்ளதாவது: உலகளவில், இந்தியாவில் தான் தரவுகளுக்கான கட்டணங்கள் மிகக் குறைவாக இருக்கின்றன. இதனால், தொழில்துறையால் அவற்றின் மூலதனச் செலவை ஈடுகட்ட முடியவில்லை. துறையின் மீதான வரிவிதிப்புகளை முறைப்படுத்தவும், நீண்டகாலமாக இருந்து வரும் சட்ட மோதல்களை முடிவுக்கு கொண்டு வரவும், அரசு முயற்சிக்க வேண்டும்.
இவை நிறுவனங்களின் செயலாற்றலில், பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. பொருளாதாரம், வணிகம் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவை, கொரோனா தொற்றால், இதற்கு முன் கண்டிராத நெருக்கடிக்கு ஆளாகியிருக்கின்றன. இந்த நிலையில், தொலை தொடர்பு துறையும், டிஜிட்டல் தொழில்நுட்பமும் மக்களின் வாழ்க்கைக்கு ஆக்சிஜனாக அமைந்துள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|