பதிவு செய்த நாள்
28 ஜூலை2020
23:41
மும்பை:முகேஷ் அம்பானி தலைமையிலான, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பியூச்சர் குழுமத்தின் சில்லரை வணிகத்தை, 27 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தக்கூடும் என, செய்திகள் வருகின்றன.
சில்லரை விற்பனை வணிகத்தில், ரிலையன்ஸ் தன்னை மேலும் நிலை நிறுத்தி கொள்ளும் வகையில், கிஷோர் பியானி தலைமையிலான, பியூச்சர் குழுமத்தின் சில்லரை வணிகத்தை கையகப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்காக, 24 ஆயிரம் முதல், 27 ஆயிரம் கோடி ரூபாய் வரை, டீல் பேசப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.
கையகப்படுத்தலுக்கு முன்னதாக, பியூச்சர் குழுமத்தின் கீழ் செயல்பட்டு வரும், பியூச்சர் சப்ளை செயின், பியூச்சர் மார்க்கெட் நெட்வொர்க்ஸ், பியூச்சர் கன்ஸ்யூமர், பியூச்சர் லைப்ஸ்டைல் பேஷன்ஸ், பியூச்சர் ரீட்டெய்ல் ஆகிய ஐந்து நிறுவனங்களையும் ஒன்றிணைத்து, பியூச்சர் எண்டர்பிரைசஸ் என, ஒரு நிறுவனமாக மாற்ற இருப்பதாகவும், இத்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், பியூச்சர் குழுமம், வெளிநாட்டு பிராண்டுகள் மற்றும் விற்பனையாளர்களிடம் வைத்திருக்கும் கூட்டு முயற்சிகளையும் சேர்த்தே கையகப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கின்றனர்.உதாரணமாக, பியூச்சர் ரீடெய்ல் நிறுவனம், 7 லெவன் ஸ்டோர்களுடன் கூட்டு வைத்துள்ளது. இன்னும் இந்தியாவில், ஒரு ஸ்டோர் கூட துவக்கப்படாவிட்டாலும் கூட, இதுவும் ரிலையன்ஸ் வசம் செல்லும் என்கிறார்கள்.பேச்சுகள் நடந்து வருவதாகவும், முடிவுகள் எட்ட இன்னும் சிறிது காலமாகலாம் எனவும் தெரிவிக்கின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|