பதிவு செய்த நாள்
18 ஆக2020
11:18
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஏற்றத்துடன் துவங்கின. சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகத்தை துவங்கி, 477 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது.
அமெரிக்க பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவு, ஹாங்காங் உள்ளிட்ட ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம், அந்நிய பண வரத்து அதிகரிப்பு, உள்நாட்டில் முக்கிய நிறுவன பங்குகளான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ., எச்டிஎப்சி., இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் அதிக ஏற்றம், முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்க தொடங்கியது உள்ளிட்ட காரணங்களால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் துவங்கின.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 210.93 புள்ளிகள் உயர்ந்து 38,261.71ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 65.30 புள்ளிகள் உயர்ந்து 11,312.40ஆகவும் வர்த்தகமானது. தொடர்ந்து காலை 11 மணியளவில் சென்செக்ஸ் 243 புள்ளிகளும், நிப்டி 80 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகின. தொடர்ந்து வர்த்தகநேர முடிவில் சென்செக்ஸ் 477.54 புள்ளிகள் உயர்ந்து 38,528.32ஆகவும், நிப்டி 138.25 புள்ளிகள் உயர்ந்து 11,385.35ஆகவும் நிறைவடைந்தன.
ரூபாயின் மதிப்பும் ஏற்றம்
பங்குச்சந்தைகள் போன்று இந்திய ரூபாயின் மதிப்பும் ஏற்றம் கண்டன. அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ.74.75ஆக நிறைவடைந்தது.
கச்சா எண்ணெய் நிலவரம்
சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 0.37 சதவீதம் குறைந்து 45.20 அமெரிக்க டாலருக்கு விற்பனையானது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|