பதிவு செய்த நாள்
18 ஆக2020
21:55
புதுடில்லி:இந்தியாவில் இருக்கும் முதலீட்டாளர்கள் இங்கிருந்தபடியே, அமெரிக்க பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதற்கு வசதியாக, புதிய சேவையை ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டீஸ் ஆகியவை அறிமுகம் செய்துள்ளன.
ஆக்சிஸ் வங்கியின் துணை நிறுவனமான, ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ், இந்திய முதலீட்டாளர்கள், அமெரிக்க பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதற்கான சேவையை துவக்கியிருக்கிறது.'உலக முதலீடு' எனும் தளத்தை, இதற்காக, ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் துவக்கி உள்ளது. இதன் மூலம், இந்நிறுவன வாடிக்கையாளர்கள் இங்கிருந்தவாறே, அமெரிக்க பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய இயலும்.
இந்த சேவையை வழங்குவதற்காக, ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ், 'ஆன்லைன்' முதலீட்டு தளமான, 'வெஸ்டெடு பைனான்ஸ்' உடன் கூட்டு வைத்துஉள்ளது.இதையடுத்து, முதலீட்டாளர்கள், 'பேஸ்புக், ஆப்பிள், கூகுள், நெட்பிளிக்ஸ்' என, பல நிறுவனங்களின் பங்குகளை வாங்கவும், விற்கவும் முடியும் அல்லது ஈ.டி.எப்., மாதிரியான முதலீடுகளிலும் பங்கேற்க இயலும்.
இந்த தளத்தின் மூலம், ஒரு அமெரிக்க டாலர் என்ற குறைந்த அளவிலான முதலீட்டை கூட மேற்கொள்ள முடியும். அதேபோல், 1,000த்துக்கும் மேற்பட்ட பங்குகள் மற்றும் ஈ.டி.எப்., களிலும் முதலீடு செய்ய முடியும்.இதே போல், கடந்த திங்களன்று, ஐ.சி.ஐ.சி., செக்யூரிட்டீஸ் நிறுவனமும், அதன் வாடிக்கையாளர்கள் அமெரிக்க பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதற்கான சேவையை துவக்கி இருப்பதாக தெரிவித்திருந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|