உள்நாட்டு செயலி, ‘சிங்காரி’க்கு குவியும் வெளிநாட்டு முதலீடுகள் உள்நாட்டு செயலி, ‘சிங்காரி’க்கு குவியும் வெளிநாட்டு முதலீடுகள் ... பங்குச்சந்தைகளில் சரிவு – சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி பங்குச்சந்தைகளில் சரிவு – சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி ...
நுழைய தவிக்கும் சீன மோட்டார் நிறுவனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஆக
2020
01:47

புதுடில்லி:சீன பொருட்கள், முதலீடுகள், நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு எதிரான மனநிலை மக்களிடையே அதிகரித்திருக்கும் நிலையில், சீனாவை சேர்ந்த வாகன தயாரிப்பு நிறுவனமான, கிரேட் வால் மோட்டார்ஸ், இந்தியாவில் தொழிலை துவக்குவதற்கான அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறது.

சீனாவின் மிகப்பெரிய எஸ்.யு.வி., ரக கார்கள் தயாரிப்பு நிறுவனமான, கிரேட் வால் மோட்டார்ஸ், கடந்த ஜனவரியில், புனேவுக்கு அருகில் உள்ள தலேகானில் இருக்கும், ‘ஜெனரல் மோட்டார்ஸ்’ நிறுவனத்தின் ஆலையை, 950 கோடி ரூபாய் முதலீட்டில் கையகப்படுத்தியது.இந்த தொகை, இந்திய எஸ்.யு.வி., கார் சந்தையில், கிரேட் வால் மோட்டார்ஸ் முதலீடு செய்ய இருக்கும், 7,500 கோடி ரூபாயில் ஒரு பகுதியாகும்.

தற்போது, கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனம், அதன் தயாரிப்புகளை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான அனுமதியை பெற, மத்திய தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தக துறை மற்றும் இந்திய போட்டி ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றை அணுகி உள்ளது. வாகன துறையில் முதலீடுகளை மேற்கொள்ள ரிசர்வ் வங்கி, அரசு ஆகியவற்றிடம் முன் அனுமதி பெற வேண்டியதில்லை.


ஆட்டோமேட்டிக் ரூட்டில் வந்துவிடலாம். எனினும், சீனாவிலிருந்து செய்யப்படும், அன்னிய நேரடி முதலீட்டுக்கு முன் அனுமதி பெற்றாக வேண்டும். கிட்டத்தட்ட, 40 சீன முதலீட்டு திட்டங்கள் அரசின் அனுமதிக்காக காத்திருக்கின்றன. அவற்றில் ஒன்றாக, கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனமும் இருக்கிறது.

கிரேட் வால் மோட்டார்ஸ், இந்தியாவில் நான்கு புதிய கார்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்திருந்தது.அரசு இன்னும் அனுமதி வழங்காத நிலையில், இந்த கார்களின் அறிமுகம் ஜூன், 2021 என்பதிலிருந்து, 2022ம் ஆண்டுக்கு தள்ளிப் போகலாம் என்கிறார்கள், சந்தை வல்லுனர்கள்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)