பதிவு செய்த நாள்
20 ஆக2020
01:47
புதுடில்லி:சீன பொருட்கள், முதலீடுகள், நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு எதிரான மனநிலை மக்களிடையே அதிகரித்திருக்கும் நிலையில், சீனாவை சேர்ந்த வாகன தயாரிப்பு நிறுவனமான, கிரேட் வால் மோட்டார்ஸ், இந்தியாவில் தொழிலை துவக்குவதற்கான அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறது.
சீனாவின் மிகப்பெரிய எஸ்.யு.வி., ரக கார்கள் தயாரிப்பு நிறுவனமான, கிரேட் வால் மோட்டார்ஸ், கடந்த ஜனவரியில், புனேவுக்கு அருகில் உள்ள தலேகானில் இருக்கும், ‘ஜெனரல் மோட்டார்ஸ்’ நிறுவனத்தின் ஆலையை, 950 கோடி ரூபாய் முதலீட்டில் கையகப்படுத்தியது.இந்த தொகை, இந்திய எஸ்.யு.வி., கார் சந்தையில், கிரேட் வால் மோட்டார்ஸ் முதலீடு செய்ய இருக்கும், 7,500 கோடி ரூபாயில் ஒரு பகுதியாகும்.
தற்போது, கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனம், அதன் தயாரிப்புகளை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான அனுமதியை பெற, மத்திய தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தக துறை மற்றும் இந்திய போட்டி ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றை அணுகி உள்ளது. வாகன துறையில் முதலீடுகளை மேற்கொள்ள ரிசர்வ் வங்கி, அரசு ஆகியவற்றிடம் முன் அனுமதி பெற வேண்டியதில்லை.
ஆட்டோமேட்டிக் ரூட்டில் வந்துவிடலாம். எனினும், சீனாவிலிருந்து செய்யப்படும், அன்னிய நேரடி முதலீட்டுக்கு முன் அனுமதி பெற்றாக வேண்டும். கிட்டத்தட்ட, 40 சீன முதலீட்டு திட்டங்கள் அரசின் அனுமதிக்காக காத்திருக்கின்றன. அவற்றில் ஒன்றாக, கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனமும் இருக்கிறது.
கிரேட் வால் மோட்டார்ஸ், இந்தியாவில் நான்கு புதிய கார்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்திருந்தது.அரசு இன்னும் அனுமதி வழங்காத நிலையில், இந்த கார்களின் அறிமுகம் ஜூன், 2021 என்பதிலிருந்து, 2022ம் ஆண்டுக்கு தள்ளிப் போகலாம் என்கிறார்கள், சந்தை வல்லுனர்கள்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|