நுழைய தவிக்கும் சீன மோட்டார் நிறுவனம் நுழைய தவிக்கும் சீன மோட்டார் நிறுவனம் ... தங்கம் விலை சவரன் ரூ.656 சரிவு தங்கம் விலை சவரன் ரூ.656 சரிவு ...
பங்குச்சந்தைகளில் சரிவு – சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஆக
2020
11:27

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் கடந்த மூன்று தினங்களாக ஏற்றம் கண்ட நிலையில் வர்த்தக வாரத்தின் நான்காம் நாளான இன்று(ஆக.,20) சரிவுடன் வர்த்தகத்தை துவங்கின. சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி கண்டன.

அமெரிக்க பெடரல் வங்கியின் நிதிநிலை கூட்டம் நேற்று நடந்தது. இதில் கொரோனா பிரச்னையால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என்றும், இதிலிருந்து மீண்டும் வருவது சற்று கடினம் என தெரிவிக்கப்பட்டது. இதன் பாதிப்பு உலக சந்தைகளில் எதிரொலித்தது. ஷாங்காய், ஹாங்காங் டோக்கியோ உள்ளிட்ட ஆசியாவின் பிற பங்குச்சந்தைகளும் சரிவை சந்தித்ததாலும் இந்திய பங்குச்சந்தைகள் சரிவை கண்டன. மேலும் முதலீட்டாளர்கள் கடந்த கால வர்த்தகத்தில் காணப்பட்ட ஏற்றத்தை கருத்தில் கொண்டு லாபநோக்கத்தோடு அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததாலும், ரூபாயின் மதிப்பு சரிவாலும் இன்றைய வர்த்தகம் சரிய காரணமாக அமைந்தது.

இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 344.53 புள்ளிகள் சரிந்து 38,270.26ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 92.80 புள்ளிகள் சரிந்து 11,315.60ஆகவும் வர்த்தகமாகின. தொடர்ந்து காலை 11 மணியளவில் சென்செக்ஸ் 310, நிப்டி 75 புள்ளிகள் சரிந்து வர்த்தகத்தை தொடர்ந்தன.

ரூபாயின் மதிப்பும் சரிவு
பங்குச்சந்தைகள் போன்று ரூபாயின் மதிப்பும் சரிந்தது. அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ.75.03ஆக வர்த்தகமானது.

கச்சா எண்ணெய் விலை சரிவு
சர்வதேச சந்தையில் இன்றைய கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 0.75 சதவீதம் குறைந்து 45.03 அமெரிக்க டாலருக்கு விற்பனையானது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)