அமெரிக்கா, பிரிட்டனை விட சீனாவுக்கான ஏற்றுமதி அதிகரிப்பு அமெரிக்கா, பிரிட்டனை விட சீனாவுக்கான ஏற்றுமதி அதிகரிப்பு ... தங்கம் விலை சவரன் ரூ.40 ஆயிரத்திற்கு கீழ் வந்தது தங்கம் விலை சவரன் ரூ.40 ஆயிரத்திற்கு கீழ் வந்தது ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
மியூச்சுவல் பண்ட்: எஸ்.டி.பி., வசதி முக்கிய அம்சங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஆக
2020
00:36

மியூச்சுவல் பண்ட் முதலீடு பற்றி பேசப்படும் போதெல்லாம் எஸ்.ஐ.பி., எனும் ’சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மண்ட் பிளான்’ வழிமுறை பற்றி அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. குறிப்பிட்ட இடைவெளியில், குறிப்பிட்ட தொகையை மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்ய எஸ்.ஐ.பி., முறை உதவுகிறது. சீரான சேமிப்பை சாத்தியமாக்குவதோடு, சிறிய தொகையிலும் முதலீட்டை துவக்கலாம். இதே போலவே, எஸ்.டி.பி., எனப்படும் ’சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்பர் பிளான்’ முறையும் இருக்கிறது. இதன் முக்கிய அம்சங்களை பார்க்கலாம்:


முதலீடு மாற்றம்:


பொருத்தமான மியூச்சுவல் பண்ட் திட்டத்தை தேர்வு செய்து அதில், சீரான முறையில் முதலீடு செய்ய எஸ்.ஐ.பி., வழி செய்கிறது. மொத்தமாக முதலீடு செய்துள்ள ஒரு மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் இருந்து, அதே நிறுவனத்தின் இன்னொரு திட்டத்திற்கு குறிப்பிட்ட தொகையை சீராக மாற்ற எஸ்.டி.பி., வழி செய்கிறது.


என்ன சிறப்பு?



மியூச்சுவல் பண்டில் மொத்தமாக முதலீடு செய்யலாம் அல்லது எஸ்.ஐ.பி., மூலம் சிறுக சிறுக முதலீடு செய்யலாம். மொத்தமாக முதலீடு செய்யும் போது, அதன் இடரை குறைக்க, வேறு ஒரு திட்டத்திற்கு பகுதி பகுதியாக முதலீட்டை மாற்றலாம். ஈக்விட்டி நிதியில் இருந்து கடன்சார் நிதிக்கு அல்லது கடன்சார் நிதியில் இருந்து ஈக்விட்டி நிதிக்கு மாற்றலாம்.


எதற்காக?



ஈக்விட்டி நிதி அதிக பலன் அளிக்க வல்லவை, ஆனால் இடர் மிக்கவை. கடன்சார் நிதியில் இடர் குறைவு என்றாலும், பலனும் மிதமாகவே இருக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப ஒருவர், ஒரு வகை நிதியில் இருந்து இன்னொரு நிதிக்கு முதலீட்டை படிப்படியாக மாற்றி பலன் பெறலாம்.


வரி தாக்கம்:


எஸ்.டி.பி., வசதியை பயன்படுத்த தீர்மானித்தால், குறைந்தது ஆறு முறையேனும் முதலீடு தொகையை மாற்ற வேண்டும். ஒவ்வொரு முறை மாற்றும் போது, யூனிட்கள் விலக்கி கொள்வதாக கணக்கிடப்படும். இதனால் ஏற்படக்கூடிய மூலதன ஆதாயம், நிதியின் தன்மைக்கு ஏற்ப வரி விதிப்புக்கு உட்பட்டது.


யாருக்கு ஏற்றது?


தற்போதைய சூழலில் பங்குச்சந்தை ஏற்ற இறக்கமாக இருக்கிறது. பலரும் பங்குகள் சார்ந்த ஈக்விட்டி நிதியில் மொத்தமாக முதலீடு செய்ய தயங்கலாம். எனவே, இடர் குறைந்த கடன்சார் நிதியில் மொத்தமாக முதலீடு செய்து, அதிலிருந்து ஈக்விட்டி நிதியில் எஸ்.டி.பி., மூலம் முதலீடு செய்யலாம்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)