எம்.எஸ்.எம்.இ., கூடுதல் கடன்; சுமையா, சுகமா?எம்.எஸ்.எம்.இ., கூடுதல் கடன்; சுமையா, சுகமா? ...  ரிசர்வ் வங்கி கவர்னருக்கு ஏ.இ.பி.சி., தலைவர் கடிதம் ரிசர்வ் வங்கி கவர்னருக்கு ஏ.இ.பி.சி., தலைவர் கடிதம் ...
‘உதயம்’ இணையதளம் மூலம் 3 லட்சம் நிறுவனங்கள் பதிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஆக
2020
00:03

புதுடில்லி:‘உதயம்’ இணையதளம் மூலம், இரண்டு மாதங்களில், கிட்டத்தட்ட மூன்று லட்சத்துக்கும் அதிகமான குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் பதிவு செய்துள்ளதாக, இத்துறை அமைச்சகத்தின் செயலாளரான ஏ.கே.ஷர்மா தெரிவித்துஉள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது:உதயம் இணையதளத்தின் மூலமாக, ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதத்தில், மூன்று லட்சத்துக்கும் அதிகமான குறு, சிறு, நடுத்தர நிறுவன பதிவுகள் நடந்துள்ளன. இப்போது வேகம் இன்னும் அதிகரித்து வருகிறது.

இந்த இணையதளத்தின் மூலமாக பதிவு செய்வதற்கு, எந்த வித கட்டணமும் வசூலிக்கப் படுவது இல்லை. முழுக்க முழுக்க இலவசமாகவே பதிவு செய்துகொள்ள முடியும்.ஆனால், தாங்கள் பதிவு செய்து தருவதாக கூறி, பல போலி வலை தளங்கள் செயல்படுவதாக எங்களுக்கு தகவல்கள் வந்துள்ளன. அவர்களை நான் எச்சரிக்க விரும்புகிறேன்.

தற்போது நாங்கள் ‘பண்டு ஆப் பண்ட்ஸ்’ திட்டத்தை அறிமுகம் செய்வது குறித்த முயற்சியிலும் இறங்கி உள்ளோம். இது சம்பந்தமான பெரும்பாலான விஷயங்கள் முடிந்துவிட்டன. இத்திட்டத்தின் மூலமாக, மிகக் குறுகிய காலத்தில் நாங்கள் சந்தையில் தனியார் பங்கு முதலீடுகள் மற்றும் துணிகர முதலீடுகள் ஆகியவற்றை ஈர்ப்போம்.

கடந்த மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையில், பல்லாயிரம் கோடி ரூபாய் அரசுத் துறைகள் மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கடந்த மே மாதம் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, பண்ட் ஆப் பண்ட்ஸ் மூலமாக, 50 ஆயிரம் கோடி ரூபாய் பங்கு முதலீட்டை வழங்க இருப்பதாக அறிவித்திருந்தார்.மேலும், இத்தகைய நிறுவனங்களுக்கு, இத்திட்டத்தின் மூலம் பங்கு நிதியுதவி வழங்கும் பொருட்டு, 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி தொகுப்பை வழங்க இருப்பதாகவும் அறிவித்திருந்தார்.

தொழில்முறை நிறுவனங்கள் அல்லது துணிகர முதலீட்டாளர்கள் உதவியின் மூலம் நிதி திரட்டுவதற்கான வாய்ப்புகள் ஏதும் இல்லாத, துவக்க நிலையில் இருக்கும் வணிகங்களுக்கு உதவும் வகையில், இந்த நிதித் திட்டம் துவங்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)