பதிவு செய்த நாள்
29 ஆக2020
02:39
புதுடில்லி:நீண்ட நாட்களாக பேசப்பட்டு வந்த ஒரு, ‘டீல்’ முடிவுக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிஷோர் பியானியின், சூப்பர் மார்க்கெட் நிறுவனமான பியூச்சர் என்டர்பிரைசஸ் நிறுவனத்தை ரிலையன்ஸ் ரீட்டெய்ல் கையகப்படுத்தி விடும் முயற்சி இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது என செய்திகள் வருகின்றன.பியூச்சர் குழுமம், ‘பிக்பஜார்’ உள்ளிட்ட சில்லரை வணிகங்களை நிர்வகித்து வருகிறது.
இந்த டீல் நடந்து முடிந்தால், ஸ்டோர்கள் பிரிவில், முதல் இடத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பிடித்துவிடும்.மேலும், கிஷோர் பியானி சில்லரை வர்த்தகத்தை விட்டு வெளியேறி விடுவார் என சொல்லப்படுகிறது.இது குறித்த இறுதி முடிவை, இன்று பியூச்சர் என்டர்பிரைசஸ் நிர்வாக குழு எடுக்க இருக்கிறது.
குழுமத்தின் சில்லரை விற்பனை வணிகத்தை ரிலையன்சுக்கு கொடுப்பதன் மூலம், கடன் மற்றும் பொறுப்புகளிலிருந்து குழுமம் ஓரளவு விடுபட்டுவிடும்.இந்த டீலின் மதிப்பு, 29 ஆயிரத்திலிருந்து, 30 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என, சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த டீல் மூலம் கிடைக்கும் பணத்தில், 13 ஆயிரம் கோடி ரூபாயை கடனை அடைக்கவும், 7 ஆயிரம் கோடி ரூபாயை வாடகை பாக்கி உள்ளிட்ட பொறுப்புகளை தீர்க்கவும், மீதி குழும நிறுவனர்களுக்கும் வழங்கப்படக்கூடும் என சொல்லப்படுகிறது.பியூச்சர் குழுமத்தின் சில்லரை விற்பனை வணிகத்தை கைப்பற்றுவதுடன், பியூச்சர் குழுமத்தின் சிறுபான்மை பங்குகளும் கிடைக்கும் வகையில், ரிலையன்ஸ் டீல் அமைந்துள்ளது.பியூச்சர் ரீட்டெய்ல் வணிகத்துக்கு நாடெங்கும் மொத்தம், 1,800க்கும் மேற்பட்ட ஸ்டோர்கள் உள்ளன.
பங்கு விலை அதிகரிப்பு
ரிலையன்ஸ் டீல் குறித்து , பியூச்சர் என்டர்பிரைசஸ் நிர்வாக குழு இன்று முடிவெடுப்பதாக வந்த செய்தியை அடுத்து, நேற்று பங்குச் சந்தையில் பியூச்சர் என்டர்பிரைசஸ் பங்குகள் விலை 4.96 சதவீதம் அதிகரித்து, 20.10 ரூபாயாக உயர்ந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|