பதிவு செய்த நாள்
25 செப்2020
22:04
புதுடில்லி:மாருதி சுசூகி நிறுவனத்தின் தயாரிப்பான, ‘வேகன் ஆர் எஸ் – சி.என்.ஜி.,’ மாடல் காரின் விற்பனை, 3 லட்சத்தை தாண்டிஇருப்பதாக, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இயற்கை எரிவாயு கொண்டு இயங்கும் இந்த கார், அனைத்து பயணியர் வாகனங்களில் மிகப்பெரிய வெற்றியை அடைந்த கார் என்றும் மாருதி தெரிவித்து உள்ளது.இது குறித்து, இந்நிறுவனத்தின் விற்பனை பிரிவின் நிர்வாக இயக்குனர் ஷஷாங் ஸ்ரீவத்ஸவா கூறியதாவது;‘வேகன் ஆர்’ காரைப் பொறுத்தவரை தொடர்ந்து, 20 ஆண்டுகளாக,‘டாப் – 10’ கார்களில் ஒன்றாக இருந்து வருகிறது.
கடந்த, 1999ம் ஆண்டில் சந்தைக்கு வந்த,‘வேகன் ஆர்.,’ அறிமுகமானதிலிருந்து இதுவரை, 24 லட்சத்துக்கும் அதிகமாக விற்பனை ஆகி, சாதனை படைத்துள்ளது.இந்த வரிசையில், அடுத்து, ‘வேகன் ஆர்’ காரின், ‘சி.என்.ஜி.,’ மாடல் கார் விற்பனை, 3 லட்சத்தை தாண்டியிருக்கிறது.இது, நிறுவனத்தின் மீது வாடிக்கையாளருக்கு இருக்கும் நம்பிக்கையை உணர்த்துவதாக இருக்கிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|