பதிவு செய்த நாள்
06 அக்2020
19:50
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 366.76 புள்ளிகள் உயர்ந்து 39,340.46ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 92.35 புள்ளிகள் உயர்ந்து 11,595.70ஆகவும் வர்த்தகமானது. தொடர்ந்து காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 300 புள்ளிகளும், நிப்டி 85 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகத்தை தொடர்ந்தன.
ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றம், அமெரிக்க அதிபர் கொரோனாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு வருவது, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியது மற்றும் உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றமான சூழல், முன்னணி நிறுவன பங்குகள் ஏற்றம், முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்க தொடங்கியது உள்ளிட்ட காரணங்களால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து வர்த்தகநேர முடிவில் சென்செக்ஸ் 600.87 புள்ளிகள் உயர்ந்து 39,574.57ஆகவும், நிப்டி 159.05 புள்ளிகள் உயர்ந்து 11,662.40ஆகவும் முடிந்தன.
ரூபாயின் மதிப்பு சரிவு
அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 16 காசுகள் சரிந்து ரூ.73.45ஆக இருந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|