அனைத்து வைப்பீட்டாளர்களுக்கும் பாதுகாப்பை லக்ஷ்மி விலாஸ் பேங்க் உறுதி செய்கிறதுஅனைத்து வைப்பீட்டாளர்களுக்கும் பாதுகாப்பை லக்ஷ்மி விலாஸ் பேங்க் உறுதி ... ...  நிதிக்கொள்கை குழு கூட்டம் இன்று துவங்குவதாக அறிவிப்பு நிதிக்கொள்கை குழு கூட்டம் இன்று துவங்குவதாக அறிவிப்பு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச்சந்தைகளில் தொடர் ஏற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 அக்
2020
19:50

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 366.76 புள்ளிகள் உயர்ந்து 39,340.46ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 92.35 புள்ளிகள் உயர்ந்து 11,595.70ஆகவும் வர்த்தகமானது. தொடர்ந்து காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 300 புள்ளிகளும், நிப்டி 85 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகத்தை தொடர்ந்தன.

ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றம், அமெரிக்க அதிபர் கொரோனாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு வருவது, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியது மற்றும் உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றமான சூழல், முன்னணி நிறுவன பங்குகள் ஏற்றம், முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்க தொடங்கியது உள்ளிட்ட காரணங்களால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து வர்த்தகநேர முடிவில் சென்செக்ஸ் 600.87 புள்ளிகள் உயர்ந்து 39,574.57ஆகவும், நிப்டி 159.05 புள்ளிகள் உயர்ந்து 11,662.40ஆகவும் முடிந்தன.

ரூபாயின் மதிப்பு சரிவு
அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 16 காசுகள் சரிந்து ரூ.73.45ஆக இருந்தது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)