பதிவு செய்த நாள்
06 அக்2020
21:38
புதுடில்லி:மாருதி சுசூகி நிறுவனம்,அதன் காம்பாக்ட் எஸ்.யு.வி., காரான, ‘விட்டாரா பிரெஸ்ஸா’ அறிமுகம் ஆன நான்கரை ஆண்டுகளில், மொத்தம், 5.5 லட்சம் கார்களை விற்பனை செய்திருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த கார், 2016ம் ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.இதன் பின், ‘பாரத் ஸ்டேஜ் – 6’ தொழில்நுட்ப முறை அமலாவதை முன்னிட்டு, நடப்பு ஆண்டின் துவக்கத்தில் அதற்கு ஏற்ற வகையிலான புதிய மாடலை அறிமுகம் செய்தது.இந்த கார், 4 சிலிண்டர்கள், 1.5 லிட்டர்,‘கே சீரிஸ்’ என்ஜின் கொண்டதாக அறிமுகம் ஆனது. இதில் பெட்ரோல் கார் மட்டுமே அறிமுகம் ஆனது. டீசல் கார் தயாரிப்பு கிடையாது.
கடந்த, 6 மாதங்களில், இந்த புதிய வகை விட்டாரா பிரெஸ்ஸா கார் விற்பனை, 32 ஆயிரம் கார்களை தாண்டியுள்ளது.இது குறித்து, மாருதி சுசூகி நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவின் நிர்வாக இயக்குனர் ஷஷாங் ஸ்ரீவாத்ஸவா கூறியிருப்பதாவது: விட்டாரா பிரெஸ்ஸா, அதன் சிறப்பான வடிவமைப்பு மற்றும் செயல்திறன் காரணமாக மிகவும் விரும்பப்படுவதாக இருக்கிறது.புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் மாடலும் தொடர்ந்து வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.இவ்வாறு, தெரிவித்து உள்ளார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|