பதிவு செய்த நாள்
09 அக்2020
11:51
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் கடந்த ஒரு வாரமாக ஏற்றத்துடன் வர்த்தகமான நிலையில் நேற்று சென்செக்ஸ் மீண்டும் 40 ஆயிரம் புள்ளிகளை எட்டியது. இன்றும்(அக்., 9) அதே புள்ளிகள் ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடர்ந்து வருகிறது.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 103.44 புள்ளிகள் உயர்ந்து 40,286.11 புள்ளிகளும், நிப்டி 34.85 புள்ளிகள் உயர்ந்து 11,869.45 புள்ளிகளும் ஆகவும் வர்த்தகமாகின. தொடர்ந்து காலை 10.50 மணியளவில் சென்செக்ஸ் 197, நிப்டி 50 புள்ளிகளுக்கு அதிகமாக உயர்வுடன் வர்த்தகத்தை தொடர்ந்தன.
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்து இருப்பது. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றம் போன்ற காரணங்களாலும், ரூபாயின் மதிப்பு உயர்வாலும் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ரூபாயின் மதிப்பு உயர்வு
அந்நிய செலவாணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ.73.16ஆக வர்த்தகமானது.
சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 0.35 சதவீதம் சரிந்து 43.19 அமெரிக்க டாலராக விற்பனையாகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|