ரெபோ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை : 4% ஆக தொடரும்ரெபோ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை : 4% ஆக தொடரும் ...  நிறுவனங்கள் இணைப்பு முயற்சி தள்ளிவைத்த ஓ.என்.ஜி.சி., நிறுவனங்கள் இணைப்பு முயற்சி தள்ளிவைத்த ஓ.என்.ஜி.சி., ...
‘ஜி.எஸ்.டி., ஆர்- 3பி நில் ரிட்டர்ன்’ குறுந்தகவலில் தாக்கல் செய்யலாம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 அக்
2020
21:57

சென்னை:மொபைல் போன் எண்ணிலிருந்து குறுந்தகவல் அனுப்பி, ‘ஜி.எஸ்.டி.,ஆர் -3பி நில் ரிட்டர்ன்’ தாக்கல் செய்யலாம் என, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவை வரியில், மாதம் தோறும் ஜி.எஸ்.டி.ஆர்., 1 மற்றும் ஜி.எஸ்.டி.ஆர்.,- 3பி தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.ஜி.எஸ்.டி.ஆர்., 3பி’யை பொறுத்தவரை, மாதம்தோறும், 20ம் தேதிக்குள், தாமதக் கட்டணம் இல்லாமல் தாக்கல் செய்யலாம்.தற்போது, கணக்கு தாக்கல் செய்ய, பில் ஏதும் இல்லாத நிலையில், மொபைல் போனில் குறுந்தகவல் வாயிலாக, ‘நில் ரிட்டர்ன்’ தாக்கல் செய்யலாம்.

இது குறித்து, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கூறியதாவது:ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் 3பி, மாதம் தோறும் செய்ய வேண்டும். ஒரு மாதத்தில் எந்த சேவையோ, விற்பனையோ இல்லை எனில், அந்த மாதத்திற்கு ‘நில் ரிட்டர்ன்’ தாக்கல் செய்ய வேண்டும். இதை, மொபைல் போனிலிருந்து குறுந்தகவல் அனுப்பி, தற்போது தாக்கல் செய்ய முடியும்.இதற்கு, சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.


இதன்படி, பதிவு செய்துள்ள நிறுவனத்தின், அதிகாரப்பூர்வ பதிவாளரின் மொபைல் எண், ஜி.எஸ்.டி., போர்ட்டலில் பதிவு செய்திருக்க வேண்டும்.முந்தைய காலங்களில், ஜி.எஸ்.டி., ஆர் 3பி தாக்கல் செய்திருக்க வேண்டும். எந்த வரியும் நிலுவையில் இருக்கக் கூடாது மற்றும் தாமதக் கட்டணமோ அல்லது வட்டியோ செலுத்தி இருக்கக் கூடாது. இந்த நிபந்தனைகளின் படி, மாதம் தோறும் குறுந்தகவல் அனுப்பி நில் ரிட்டர்ன் தாக்கல் செய்யலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)