பதிவு செய்த நாள்
13 அக்2020
22:48
புதுடில்லி : நிதித் துறையைச் சேர்ந்த நிறுவனமான, பஜாஜ் பின்சர்வ், மியூச்சுவல் பண்டு வணிகத்தில் இறங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
மியூச்சுவல் பண்டு நிறுவனத்தை துவங்குவதற்காக, இந்நிறுவனம், கடந்த செப்டம்பர் மாதம், 28ம் தேதியன்று பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’க்கு, உரிமம் வழங்க கோரி
விண்ணப்பித்துள்ளது.தற்போது, இந்திய மியூச்சுவல் பண்டு துறையில் மொத்தம், 40 நிறுவனங்கள் இருக்கின்றன. இவை நிர்வகிக்கும் சொத்து மதிப்பில், 57.85 சதவீதம்,
டாப் – 5 நிறுவனங்கள் வசம் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பஜாஜ் பின்சர்வ் நிறுவனமும் களத்தில் இறங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனத்திற்கு இருக்கும் பரந்துபட்ட வினியோக வாய்ப்பு களால், இத்துறையில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடிக்க முடியும் என, பஜாஜ் பின்சர்வ் நம்புகிறது.இந்நிறுவனத்தின் துணை நிறுவனமான, பஜாஜ் பைனான்ஸ், 2,392 இடங்களில் கால்பதித்திருக்கிறது.
இவற்றில், 1,357 அலுவலகங்கள், சிறு நகரங்கள் மற்றும் கிராமப் பகுதிகளில் இருக்கின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|