பதிவு செய்த நாள்
22 அக்2020
00:44
புதுடில்லி:ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், குவால்காம் நிறுவனத்துடன் இணைந்து, ஒரு ஜி.பி.பி.எஸ்., வேகத்திலான, 5ஜி நெட்வொர்க் குறித்து எடுக்கப்பட்ட சோதனை முயற்சி வெற்றி பெற்றிருப்பதாக அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ, அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான, குவால்காம் உடன் இணைந்து, 5ஜி சேவை குறித்த சோதனையை, அமெரிக்காவில் மேற்கொண்டதில் வெற்றி பெற்றுள்ளது.ரிலையன்ஸ் ஜியோ, 5ஜி இணைப்புக்காக, சொந்தமாக 5ஜி, ரேடியோ அக்சஸ் நெட்வொர்க் இயங்குதளத்தை உருவாக்கியுள்ளது.
இதையடுத்து, இவ்விரண்டு நிறுவனங்களும் இணைந்து, இந்தியாவில் 5ஜி சேவையை வழங்கும் முயற்சியில் விரைந்து ஈடுபட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனத்தின் தலைவர் மேத்யூ ஓமன் கூறியதாவது:
குவால்காம் நிறுவன ஆதரவுடன், சொந்தமாக 5ஜி இணைப்புகளுக்கு தேவையான தயாரிப்பை உருவாக்கி, ஒரு ஜி.பி.பி.எஸ்., வேகத்தினை எட்டியிருக்கிறோம்.இதன் மூலம், இந்தியாவில், 5ஜி சேவை வழங்கும் முயற்சிகளும் வேகப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|