ரிலையன்ஸ் ஜியோ 5ஜி முயற்சி வெற்றி ரிலையன்ஸ் ஜியோ 5ஜி முயற்சி வெற்றி ...  நாளைய பொருளாதாரத்தைதீர்மானிக்கும், 20 சந்தைகள் நாளைய பொருளாதாரத்தைதீர்மானிக்கும், 20 சந்தைகள் ...
இனி இந்தியா, சேமிப்பாளர்களின் தேசமல்ல
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2020
00:46

மும்பை:இந்தியா, ‘சேமிப்பாளர்களின் தேசம்’ என்ற எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டு வருவதாக ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

ஓய்வுக் காலத்துக்கான திட்டமிடல் குறித்து, மக்களின் எண்ணத்தை அறிய , நீல்சன் நிறுவனத்துடன் இணைந்து, பி.ஜி.ஐ.எம்., இந்தியா மியூச்சுவல் பண்டு நிறுவனம் கருத்தாய்வு ஒன்றை மேற்கொண்டது.இந்த ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வீட்டுக்கடன், பிணை பாதுகாப்பற்ற கடன்கள், கிரெடிட் கார்டுகள் ஆகியவை அதிகரித்து வரும் நிலையில், இந்தியர்கள் குறைவாகவே சேமிக்கின்றனர்

*எதிர்காலத்துக்கான சேமிப்பு மற்றும் திட்டமிடலுக்குப் பதிலாக, நடப்பு செலவினங்கள் மீதே அதிக கவனம் செலுத்துகின்றனர்


* நிலையான வேலை; 60 வயதில் ஓய்வு என்ற காலமும் மலையேறிக் கொண்டிருக்கிறதுநகர்ப்புறங்களைச் சேர்ந்த இந்தியர்கள் குறைவாகவே சேமிக்கின்றனர்; குறைவாகவே செலவழிக்கின்றனர். 59% வருவாயை, நடப்பு செலவினங்களுக்காகவே ஒதுக்குகின்றனர்

* பெரும்பாலான இந்தியர்களுக்கு, ஓய்வுகால நிதி என தனியாக இருப்பதில்லை. இதற்கு அவர்கள் கையில் வேறு நிதி அல்லது முதலீடுகள் இருப்பதும் ஒரு காரணம் பணி ஓய்வை விட, குழந்தைகள் வாழ்க்கைத் துணை ஆகியோருக்கான தேவைகளுக்கு, அதிக முன்னுரிமை கொடுக்கின்றனர்

* கிட்டத்தட்ட, 51 சதவீதம் பேர், பணி ஓய்வுக்காக எதையும் மேற்கொள்ளவில்லை பணி ஓய்வு காலத்திற்காக தயாராக இல்லை என்று கருதுகிற, 89 சதவீதம் பேருக்கு வேறு வழிகளில் வருவாய் எதுவுமில்லை.

* ஐந்தில் ஒரு பங்கு இந்தியர்களே, பணி ஓய்வுக்காக திட்டமிடும் போது, பணவீக்கத்தை கருத்தில் கொள்கின்றனர்

* பணி ஓய்வுக்கு பிந்தைய வாழ்க்கைக்கு தேவைப்படும் தொகை எவ்வளவு என்பது பற்றி, 48 சதவீத நபர்களுக்கு எதுவும் தெரியவில்லை.இன்றைக்கு கல்விக்கு, காருக்கு வீடுக்கு என அனைத்துக்கும் கடன் கிடைக்கும். ஆனால் பணி ஓய்வுக் காலத்துக்கு மட்டும் கடன் கிடைக்காது. சேமித்து வைத்தால் தான் உண்டு.அஜித் மேனன், தலைமை செயல் அதிகாரி, பி.ஜி.ஐ.எம்., இந்தியா மியூச்சுவல் பண்டு

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)