பதிவு செய்த நாள்
22 அக்2020
00:46
மும்பை:இந்தியா, ‘சேமிப்பாளர்களின் தேசம்’ என்ற எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டு வருவதாக ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
ஓய்வுக் காலத்துக்கான திட்டமிடல் குறித்து, மக்களின் எண்ணத்தை அறிய , நீல்சன் நிறுவனத்துடன் இணைந்து, பி.ஜி.ஐ.எம்., இந்தியா மியூச்சுவல் பண்டு நிறுவனம் கருத்தாய்வு ஒன்றை மேற்கொண்டது.இந்த ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வீட்டுக்கடன், பிணை பாதுகாப்பற்ற கடன்கள், கிரெடிட் கார்டுகள் ஆகியவை அதிகரித்து வரும் நிலையில், இந்தியர்கள் குறைவாகவே சேமிக்கின்றனர்
*எதிர்காலத்துக்கான சேமிப்பு மற்றும் திட்டமிடலுக்குப் பதிலாக, நடப்பு செலவினங்கள் மீதே அதிக கவனம் செலுத்துகின்றனர்
* நிலையான வேலை; 60 வயதில் ஓய்வு என்ற காலமும் மலையேறிக் கொண்டிருக்கிறதுநகர்ப்புறங்களைச் சேர்ந்த இந்தியர்கள் குறைவாகவே சேமிக்கின்றனர்; குறைவாகவே செலவழிக்கின்றனர். 59% வருவாயை, நடப்பு செலவினங்களுக்காகவே ஒதுக்குகின்றனர்
* பெரும்பாலான இந்தியர்களுக்கு, ஓய்வுகால நிதி என தனியாக இருப்பதில்லை. இதற்கு அவர்கள் கையில் வேறு நிதி அல்லது முதலீடுகள் இருப்பதும் ஒரு காரணம் பணி ஓய்வை விட, குழந்தைகள் வாழ்க்கைத் துணை ஆகியோருக்கான தேவைகளுக்கு, அதிக முன்னுரிமை கொடுக்கின்றனர்
* கிட்டத்தட்ட, 51 சதவீதம் பேர், பணி ஓய்வுக்காக எதையும் மேற்கொள்ளவில்லை பணி ஓய்வு காலத்திற்காக தயாராக இல்லை என்று கருதுகிற, 89 சதவீதம் பேருக்கு வேறு வழிகளில் வருவாய் எதுவுமில்லை.
* ஐந்தில் ஒரு பங்கு இந்தியர்களே, பணி ஓய்வுக்காக திட்டமிடும் போது, பணவீக்கத்தை கருத்தில் கொள்கின்றனர்
* பணி ஓய்வுக்கு பிந்தைய வாழ்க்கைக்கு தேவைப்படும் தொகை எவ்வளவு என்பது பற்றி, 48 சதவீத நபர்களுக்கு எதுவும் தெரியவில்லை.இன்றைக்கு கல்விக்கு, காருக்கு வீடுக்கு என அனைத்துக்கும் கடன் கிடைக்கும். ஆனால் பணி ஓய்வுக் காலத்துக்கு மட்டும் கடன் கிடைக்காது. சேமித்து வைத்தால் தான் உண்டு.அஜித் மேனன், தலைமை செயல் அதிகாரி, பி.ஜி.ஐ.எம்., இந்தியா மியூச்சுவல் பண்டு
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|