பதிவு செய்த நாள்
23 அக்2020
22:23
மும்பை :வாகனம், உலோகம், மின்சாரம் ஆகிய துறைகளை சேர்ந்த பங்குகள் விலை அதிகரித்ததை அடுத்து, இந்திய பங்குச் சந்தைகள், நேற்று உயர்வை சந்தித்தன.
மும்பை பங்குச் சந்தையின், சென்செக்ஸ் குறியீடு, வர்த்தகத்தின் இடையே, 252.63
புள்ளிகள் வரை அதிகரித்தது. பின், வர்த்தகத்தின் இறுதியில், 127.01 புள்ளிகள் உயர்வுடன், 40,685.50 புள்ளிகளில் நிலை பெற்றது.இதேபோல், தேசிய பங்குச் சந்தையின் நிப்டியும், வர்த்தகத்தின் இறுதியில், 33.90 புள்ளிகள் அதிகரித்து, 11,930.35 புள்ளிகளில் நிலைபெற்றது.
சென்செக்ஸ் குறியீட்டில், மாருதி சுசூகி நிறுவன பங்குகள் அதிகம் விலை உயர்ந்தன. இந்நிறுவன பங்குகள் விலை கிட்டத்தட்ட, 4 சதவீதம் வரை அதிகரித்தது. இதைத் தொடர்ந்து, மகிந்திரா அண்டு மகிந்திரா, டாடா ஸ்டீல், பவர்கிரிட், பஜாஜ் ஆட்டோ, என்.டி.பி.சி., ஆகிய நிறுவன பங்குகள், விலை அதிகரித்தன.மாறாக, அல்ட்ராடெக் சிமென்ட், எச்.சி.எல்.,டெக், எச்.யு.எல்., பஜாஜ் பின்சர்வ் ஆகிய நிறுவன பங்குகள், விலை சரிவை சந்தித்தன.உலக
சந்தையின் சாதகமான சூழல், இந்திய பங்குச்சந்தைகளிலும் பிரதிபலித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|