பதிவு செய்த நாள்
23 அக்2020
22:25
புதுடில்லி,:இந்தியாவில், வாகனங்கள் மின்மயமாக்கப்படுவது, கொரோனா வைரஸ்
பாதிப்புகளால் தாமதமாகும் என கருதுவதாக, தர நிர்ணய நிறுவனமான, ‘இந்த் – ரா’
தெரிவித்துஉள்ளது. மேலும், அரசாங்கமும், மின்சார வாகனங்களை விட, வழக்கமான வாகனங்கள் விற்பனையை அதிகரித்து, அத்துறையை மீட்சியடைய வைப்பதில் தான் அதிக முனைப்பு காட்டி வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் மேலும் தெரிவித்துஉள்ளதாவது: பயணியர் வாகன பிரிவை சார்ந்த நுகர்வோர்கள், விலை அதிகமான மின்சார வாகனங்களை வாங்குவதை விட,
வழக்கமான வாகனங்களை வாங்குவதில் தான் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.இன்னொரு பக்கம், இப்போதைய நிலையில், வாகன தயாரிப்பாளர்களும், மின்சார வாகன தயாரிப்புகளுக்காக கூடுதல் முதலீடுகளை செய்ய தயாராக இல்லை.
குறைந்த விலை, அரசின் முன்னுரிமை இவை இரண்டும் கிடைக்கும்போது மட்டுமே, மின்சார வாகன விற்பனை அதிகரிக்கும்.வாங்கும் சக்தி குறைந்திருப்பது, பொருளாதார செயல்பாடுகளில் மந்தநிலை விலகாதிருப்பது ஆகிய காரணங்களால், மின்சார வாகனங்களின் நிலைமையில் முன்னேற்றம் இல்லை.
கடந்த ஆண்டு, மூன்று சக்கர வாகனம் மற்றும் பேருந்துகள் பிரிவில், மின்சார வாகனங்கள் அதிகமாக வந்த நிலையில், இவ்வாண்டில், இவை மிக குறைவாகவே வரவேற்பு பெற்றுள்ளன.
இவை போன்ற காரணங்களால், இந்தியாவில் வாகனங்கள் மின்மயமாக்கப்படுவது, நடப்பு ஆண்டில் தாமதமாகும்
என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|