பதிவு செய்த நாள்
05 நவ2020
21:00
கோவை:கோவையில் ஏற்றுமதி வர்த்தகத்தை அதிகரிக்கும் விதமாக, ‘மாவட்ட ஏற்றுமதி முன்னேற்ற குழு’ அமைக்கப்பட்டுள்ளது. இது, தொழில் துறையினருக்கு உத்வேகத்தை தந்துள்ளது.
‘மேக் இன் இந்தியா’சுயசார்பு கொண்ட இந்தியாவாக உருவெடுக்க, ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் வாயிலாக உள்நாட்டு உற்பத்தி, ஏற்று மதியை ஊக்குவிக்க வேண்டியது அவசியம். எனவே, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க, மாவட்டந்தோறும், ‘ஏற்றுமதி முன்னேற்றக் குழுக்கள்’ அமைக்கப்படும் என, மத்திய அரசு அறிவித்திருந்தது.
கோவை மாவட்டத்தில் கலெக்டரை தலைவராகவும், வெளிநாட்டு வர்த்தக இணை இயக்குனர் ஜெனரலை (கோவை) இணை தலைவராகவும், மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை அமைப்பாளராகவும் கொண்டு, ‘மாவட்ட ஏற்றுமதி முன்னேற்றக் குழு’ தற்போது அமைக்கப்பட்டுள்ளது.
நடவடிக்கை
இவர்களுடன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், எம்.எஸ்.எம்.இ., மேம்பாட்டு நிறுவனம், கொடிசியா போன்ற தொழில் அமைப்பினர் என, 12 பிரதிநிதிகளை கொண்ட இக்குழு, வர்த்தகத்துக்கும், தொழில் முனைவோருக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கார்த்திகை வாசன் கூறியதாவது:கோவையில் ஏற்றுமதி வர்த்தகத்தை அதிகரிக்கும் விதமாக, மாவட்ட ஏற்றுமதி முன்னேற்ற குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, வெளிநாட்டு வர்த்தகத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும். மாதந்தோறும் கூட்டம் நடத்தி, கலந்து ஆலோசிக்கப்படும். வர்த்தகத்தை அதிகரிப்பதற்கான முதல் படியாக இருந்து, தொழில்முனைவோரை இக்குழு வழிநடத்தும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|