உறவினர்களிடம் கடன் வாங்கும் போது  கவனிக்க வேண்டிய விதிமுறைகள் உறவினர்களிடம் கடன் வாங்கும் போது கவனிக்க வேண்டிய விதிமுறைகள் ... தங்கம் விலையில் அதிரடி வீழ்ச்சி – சவரன் ரூ.1,136 சரிவு தங்கம் விலையில் அதிரடி வீழ்ச்சி – சவரன் ரூ.1,136 சரிவு ...
இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 நவ
2020
10:44

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வரலாற்றில் முதன்முறையாக சென்செக்ஸ், நிப்டி புதிய உச்சத்தை தொட்டு இன்றைய வர்த்தகத்தை துவங்கியது.

இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 627.21 புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சமாக 42,566.34ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 178 புள்ளிகள் உயர்ந்து, புதிய உச்சமாக 12,451.55ஆகவும் இருந்தன. தொடர்ந்து காலை 10.30 மணியளவில் சென்செக்ஸ் 550, நிப்டி 150 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகத்தை தொடர்ந்தன.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பிடனும், துணை அதிபராக இந்திய வம்சாவளியை(தமிழகம்) சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்வாகி உள்ளார். இதனால் கடந்த ஏப்ரல் மாதத்திற்கு பிறகு அமெரிக்க பங்குச்சந்தைகள் ஒரு வாரத்தில் மட்டும் 7 முதல் 9 சதவீதம் ஏற்றம் கண்டன. இதன் எதிரொலியாகவும், உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றத்தாலும், ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் உயர்வாலும், அந்நிய முதலீடுகள் அதிகளவில் ஈர்க்கப்பட்டு வருவதாலும் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் காணப்படுகின்றன. மேலும் அக்டோபர் மாதத்திற்கான பணவீக்கம், தொழில்துறை உற்பத்தி தொடர்பான தகவல் வெளியாக இருப்பதால் அதன் மீதான எதிர்பார்ப்பும் முதலீட்டாளர்கள் மத்தியில் காணப்படுகிறது. இதன் தாக்கம் இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றமான சூழலுக்கு வழி வகுத்துள்ளது.

அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 30 காசுகள் உயர்ந்து ரூ.73.90ஆக வர்த்தகமானது.

சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 2.66 சதவீதம் உயர்ந்து 40.50 அமெரிக்க டாலராக விற்பனையாகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)