பதிவு செய்த நாள்
09 நவ2020
10:44
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வரலாற்றில் முதன்முறையாக சென்செக்ஸ், நிப்டி புதிய உச்சத்தை தொட்டு இன்றைய வர்த்தகத்தை துவங்கியது.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 627.21 புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சமாக 42,566.34ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 178 புள்ளிகள் உயர்ந்து, புதிய உச்சமாக 12,451.55ஆகவும் இருந்தன. தொடர்ந்து காலை 10.30 மணியளவில் சென்செக்ஸ் 550, நிப்டி 150 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகத்தை தொடர்ந்தன.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பிடனும், துணை அதிபராக இந்திய வம்சாவளியை(தமிழகம்) சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்வாகி உள்ளார். இதனால் கடந்த ஏப்ரல் மாதத்திற்கு பிறகு அமெரிக்க பங்குச்சந்தைகள் ஒரு வாரத்தில் மட்டும் 7 முதல் 9 சதவீதம் ஏற்றம் கண்டன. இதன் எதிரொலியாகவும், உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றத்தாலும், ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் உயர்வாலும், அந்நிய முதலீடுகள் அதிகளவில் ஈர்க்கப்பட்டு வருவதாலும் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் காணப்படுகின்றன. மேலும் அக்டோபர் மாதத்திற்கான பணவீக்கம், தொழில்துறை உற்பத்தி தொடர்பான தகவல் வெளியாக இருப்பதால் அதன் மீதான எதிர்பார்ப்பும் முதலீட்டாளர்கள் மத்தியில் காணப்படுகிறது. இதன் தாக்கம் இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றமான சூழலுக்கு வழி வகுத்துள்ளது.
அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 30 காசுகள் உயர்ந்து ரூ.73.90ஆக வர்த்தகமானது.
சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 2.66 சதவீதம் உயர்ந்து 40.50 அமெரிக்க டாலராக விற்பனையாகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|