வீட்டில் இருந்து வேலை, எங்கே இருந்தும் வேலை! வீட்டில் இருந்து வேலை, எங்கே இருந்தும் வேலை! ... இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன ...
உறவினர்களிடம் கடன் வாங்கும் போது கவனிக்க வேண்டிய விதிமுறைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 நவ
2020
21:34

வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் வாங்கும் போது, பல்வேறு விதிமுறைகளும், நடைமுறைகளும் உண்டு என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். அவசர தேவைக்காக உறவினர்கள் அல்லது நண்பர்களிடம் கடன் வாங்கும் போது அல்லது கடன் கொடுக்கும் போது, இதற்கென விதிமுறைகள் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? உதாரணமாக, உறவினர்களுக்கு கொடுக்கும் போது, குறிப்பிட்ட தொகைக்கு மேல் ரொக்கமாக கொடுக்க கூடாது எனும் விதிமுறை இருக்கிறது. உறவினர்களுக்கான கடனில் பொருந்தக்கூடிய விதிமுறைகளை தெரிந்து கொள்ளலாம் :


ரொக்க வரம்பு:



உறவினர்களுக்கு கடன் வழங்கும் போது, 20 ஆயிரம் ரூபாய்க்கு மேலான தொகை எனில், அதை ரொக்கமாக அல்லது பெயர் தாங்கிய காசோலை மூலம் வழங்க முடியாது. இதற்கு மேலான தொகை எனில், கணக்கில் செலுத்தக்கூடிய காசோலை, வரைவோலை அல்லது மின்னணு பரிவர்த்தனை மூலமே வழங்க வேண்டும்.


அபராதம் உண்டு:


கடன் பெற்ற தொகையை திரும்ப செலுத்தும் போதும் இந்த வரம்பு பொருந்தும். கடன் தொகை, 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எனில், அதை காசோலை அல்லது மின்னணு பரிவர்த்தனை மூலம் மட்டுமே திரும்பி செலுத்த வேண்டும். இந்த விதிமுறையை மீறினால், வருமான வரித்துறையால் அபராதம் விதிக்கப்படலாம்.

வரி விதிப்பு என்ன?



கடன் வழங்குவது வரி விதிப்புக்கு பொருந்தாது. ஆனால், கடனுக்கான வட்டி வரி விதிப்புக்கு உரியது. கடன் கொடுத்தவர் வட்டி பெற்றுக்கொண்டால், அதற்கு வரி விதிப்பு பொருந்தும். இதர வருமானம் கீழ் இது வரும். இதே போல, வீடு கட்டுவது தொடர்பாக கடன் வாங்கி வட்டி செலுத்தினால், அதற்கு வரிச்சலுகை கோரலாம்.


வெளிநாட்டு இந்தியர்கள்:



இதே போல, வெளிநாட்டு வாழ் இந்தியர்களுடனான கடன் என்றால், இந்திய செலாவணி கட்டுப்பாடுகள் பொருந்தும். இந்தியர்கள், வெளிநாட்டு வாழ் இந்தியர்களிடம் இருந்து ரூபாயில் தான் கடன் பெறலாம். மற்ற வெளிநாட்டவரிடம் இருந்து பெற முடியாது.


ஆவணம் தேவை:


உறவினர்களிடம் இருந்து கடன் பெறும் போது அல்லது கொடுக்கும் போது, இது தொடர்பான விதிமுறைகளை அறிந்து பின்பற்றுவது அவசியம். மேலும், கடன் ஒப்பந்தம் செய்து கொள்வதும் அவசியம். வரிச்சலுகை கோர இது தேவை என்பதோடு, ஆவணமயமாக்கல் எப்போதுமே நல்லது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)