பதிவு செய்த நாள்
12 நவ2020
21:14
புதுடில்லி:கடந்த செப்டம்பரில், சுரங்கம் மற்றும் மின்சார துறைகள் சிறப்பாக செயல்பட்ட போதிலும், நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, 0.2 சதவீதம் என்ற அளவிற்கு, அதிக ஏற்றமின்றி இருந்தது.
இது குறித்து, மத்திய திட்டம் மற்றும் திட்ட அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த, செப்.,ல், நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, 0.2 சதவீதமாக உள்ளது. இதே மாதத்தில், சுரங்கத் துறையின் உற்பத்தி, 1.4 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. அதுபோல, மின்சார துறையின் உற்பத்தியும், 4.6 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.
கடந்த, ஆகஸ்டில், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, மைனஸ், 8 சதவீதமாக இருந்தது. இது, கடந்த ஆண்டு, செப்.,ல், மைனஸ் 4.6 சதவீதம் என்ற அளவில் பின்னடைவைக் கண்டிருந்தது. நாடு முழுதும் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருவதால், பொருளாதார நடவடிக்கைகள் சூடு பிடித்துள்ளன.தொழில் துறையில், கொரோனா பரவலுக்கு முன் தொழில் துறை உற்பத்தியில் கண்ட வளர்ச்சியுடன், கொரோனாவுக்கு பிந்தைய மாதங்களின் வளர்ச்சியை ஒப்பிடுவது சரியாக இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|